சென்னை, பிப்.19- தமிழ்நாட்டில் மொத்த முள்ள 30,735 வாக்குச் சாவடிகளில் 30-40 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதாகவும் உட னடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித் துள்ளார். அதோடு, இயந்திரம் பழு தான இடங்களில் 5 மணிக்கு மேல் கூடுதல் நேரம் வழங்கப் படாது எனவும் 5 மணிக்கு முன்பாக வந்து காத்திருப் போருக்கு வாக்களிக்க நேரம் வழங்கப்படும் என வும் குறிப்பிட்டார்.