ரெங்கனாதன் தீபாவளிக்காக சொந்த ஊருக்குக் குடும்பத்தோடு சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தான்.அவன் வாடகைக்குக் குடி இருந்த வீடு மிகச் சிறியது.பத்தடி அகலம் இருபத்தைந்து அடி நீளமுடையது.அதையே மூன்று தடுப்புகளாகத் தடுத்து சுவர் ஓரமாக வழியை வைத்திருப்பார்கள்.சமையல் அறை ஐந்தடி நீளமும் பத்தடி அகலமும் உடையது.பாத்திரம்,பண்டம்,பீரோ வைப்பதற்கே போதுமானதாக இருக்காது.அதனுள்ளேயே அனைத்து பொருள்களையும் அடைத்து வைத்திருந்தார்கள். வீட்டிற்கு முன்னே வந்த ரெங்கனாதன் மனைவியிடம் சாவியை வாங்கிக் கதவைத் திறந்தான். முன் கதவு அதையொட்டிய ஜன்னல்,பின் கதவு அனைத்தும் அந்த காலத்து உறுதி மிக்க தகரத்தால் ஆனது. கோடைக் காலத்தில் வீட்டினுள்ளே படுப்பது மிகக் கொடுமையானது. அவ்வ ளவு வெப்பம். மேற்கூரை ஓடுபோட்டி ருந்தாலும் அது அந்த காலத்து ஓடு, உயரம் குறைவாக இருக்கும். கையைத் தூக்கி னால் மின் விசிறி இடிக்கும். கதவைத் திறந்த ரெங்கனுக்கும், அவன் மனைவிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்…உள்ளே சிறிய சிறிய துண்டுகளாக காகிதத் தாள் துகள்கள் ஏராளமாகக் கிடந்தது.இவ்வளவு தாள் எங்கிருந்து வந்தது? என்று யோசித்துக் கொண்டி ருக்கும் போதே அவனுடைய மனைவி” ஏங்க…இதெல்லாம் வெடி வெடித்ததோட தாளுங்க” என்றவளிடம் “எங்கே வெடித்தது வீட்டு உள்ளே வந்து விழுந்திருக்கு?” என்று ரெங்கன் கேட்கும்போதே “ஏங்க ஜன்னல் இடுக்கில வெடியைச் செறுகி வெடிச்சிருக்காங்க..அதனுடைய சின்ன சின்னத் துண்டுகள் இடுக்கு வழியா உள்ளே வந்திருக்கு” என்றவுடன் “அடப் பாவிகளா…அதுவும் வெடியை ஜன்னல் இடுக்கில் அழுத்தி அது வெடிக்கும்போது வீடே அதிர்ந்திருக்குமே!”என்று வேதனைப் பட்டவனிடம்”ஏங்க…ஜன்னல் ஓரமாத்தானே டி.வி இருக்கு…அது என்னாச்சின்னு பாருங்க”என்றாள். அப்போதுதான் ரெங்கனுக்கு அதிக பயம் வந்தது.”ஆமால்ல..”என்றவன் உடனே டிவியைப் போட்டுப் பார்த்தான்.”நல்ல வேளையாக டிவிக்கு ஒன்னும் ஆகல”என்றவனிடம்”ஏங்க..இத யாருங்க செய்திருப்பா?” என்றாள்.”இரு அத ஒரு மாதிரியா விசாரிக்கணும்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் ரெங்கன்
வெளியே மூன்றாவது வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் மகன் முருகன் நின்று கொண்டி ருந்தான்.”முருகா..இங்க வாயேன்” என்று அழைத்து,வீட்டிற்குள் அழைத்துச் சென்ற வன் மனைவியிடம்” சாந்தி…முருகன் வந்தி ருக்கான்.வீட்டிலேர்ந்து எடுத்தாந்த பல காரத்தை அவுங்க வீட்டுக்குக் கொடுத்த னுப்பு”என்றான்.அந்த இடைப்பட்ட நேரத்தில்”முருகா….நீ எங்க வீட்டு ஜன்னல்ல வெடியைச் சொருவி வெடிச்சியா?” என்று கேட்டபோது”மாமா…எங்கப்பா அந்த வெடியெல்லாம் வாங்கிக் கொடுக்க மாட்டாரு.வெறும் மத்தாப்பு, பொதவானம்,சங்கு சக்கரம், சாட்டை, பென்சில் இதத்தான் வாங்கித் தருவாரு. அத நான் பத்த வைக்கும்போதுகூடப் பக்கத்திலேயே இருப்பாரு”என்றான். சரி…அப்ப யாரு வெடிச்சிருப்பா? இங்க பாரேன் எவ்வளவு வெடித் தாள்கள் கிடக்கு பாத்தியா”என்றான்.”மாமா…அது எங்க பக்கத்து வீட்டில இருக்கானே செங்கல்ராவ், அவந்தான் வெடிச்சான்.” என்றான்.”முருகா..அவனோட அப்பா அம்மாவுக்கு இது தெரியுமா?” என்றான்.”மாமா அவுங்க ரெண்டுபேரும் அதப் பாத்துகிட்டு சிரிச்சிகிட்டு இருந் தாங்க. ”எங்கப்பா கூட சொன்னாரு ஒருத்தரு வீட்டில இல்லாத நேரத்தில் அந்த தகர ஜன்னல் இடுக்கில சொருவி வெடிக்கி றான்.சத்தம் மண்டையப் பொளக்குது அந்த வீடே விரிசல் கண்டுடும் போல இருக்கு.அப்பனும் ஆத்தாளும் கண்டிக்காம ரசிக்கிறாங்க.இதெல்லாம் எங்க உருப்படப் போவுது”என்று எங்க அம்மா கிட்டப் பேசிகிட்டு இருந்தாரு “என்றான். ரெங்கன் மனைவி கொடுத்த பலகா ரத்தட்டை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றான் முருகன்.
ரெங்கன் மனைவியை அழைத்து முருகன் சொன்னதையெல்லாம் சொன்னான்.அதைக் கேட்ட ரெங்கன் மனைவி “இப்படி ஒரு அப்பன் ஆத்தா எங்காவது இருப்பாங்களா?சின்ன பைய னுக்குத் தெரியாது...சரி அத பாத்த அப்பன் ஆத்தா கண்டிச்சிருக்க வேண்டாமா? இப்படித்தாங்க பல பேரு தங்கள் பிள்ளை களைக் கெடுத்துட்டு பெரியவன் ஆனோன்ன லபோ லபோன்னு வயித்தில வாயில அடிச்சிக்கிறாங்க”என்றாள்.”நீ..ஒன்னு ஒருநாள் இராத்திரி பன்னிரெண்டு மணிக்குக் கதவத் திறந்துகிட்டு வெளியே போனேன்.அங்க அவன் அப்பன் இருக்கானே நம்ம வீட்டுக்கு முன்னாடி கோலம் போடுற இடத்தில உக்காந்து ஒன்னுக்கு போய்கிட்டு இருக்கான்.நான் ஒன்னும் கேக்கல. மனசுல மட்டும் நீ நாசமாப் போயிடுவேன்னு சாபம் விட்டுட்டு உள்ளார வந்துட்டேன்.அப்படிப்பட்ட கெட்ட புத்தி உள்ளவன் மகன் மட்டும் எப்படி இருப்பான்?”என்று சொல்லிவிட்டு வெளியே வந்த ரெங்கன் செங்கல்ராவ் வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான்.கதவு பூட்டியிருந்தது. அப்போது வெளியே வந்த முருகனிடம் “முருகா..எங்க இவங்கள காணும் வீடு பூட்டியிருக்கு”என்று கேட்டான்.”மாமா...அதைச் சொல்ல மறந்துட்டேன்.உங்க வீட்டு ஜன்னல்ல வெடியைச் சொருவி வெடிச்சவன் இன்னொரு கையில நாலஞ்சு வெடிய வச்சிருக்கான்.வெடிச்ச வெடியோட நெருப்பு அதுல பட்டு மொத்தமா வெடிச்சிடுச்சு.கை விரல்லாம் பிஞ்சுடுச்சு நெறயா ரெத்தம் கொட்டுச்சு.உடனே வண்டியில உட்கார வச்சி நம்ம ஏஞ்சல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு கிட்டு போனாங்க.. இரண்டு விரல எடுத்து ட்டாங்களாம்.எப்படியும் பத்து நாளாவது ஆவுமாம் வீட்டுக்குவர”என்றான். மிகுந்த மன வேதனையோடு இருந்த ரெங்கனுக்கு “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.” என்ற திருக்குறள்தான் நினைவுக்கு வந்தது.