tamilnadu

தியாகிகளை நினைவு கூருவது தேசவிரோத செயலா?: தி.க.கேள்வி

சென்னை, ஜன.18- புதுதில்லியில் நடைபெறும் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் வ.உ.சிதம்பரனார் - வேலு நாச்சியார் - சுபாஷ் சந்திரபோஸ் அலங்கார ஊர்திக ளுக்கு இடமில்லை என்று  ஒன்றிய அரசு மறுத்துள் ளதற்கு  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கையில்   வருகின்ற ஜனவரி 26 இல் ‘குடியரசு நாள்’ விழாவில் புதுதில்லி அணிவகுப்பில் இடம்பெறவேண்டி தமிழ்நாடு அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்தி இரண்டு ஆயுள் தண்டனை பெற்று  கோவை சிறையில் செக்கிழுத்த செம்மல்   கப்ப லோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரும், வெள்ளை யருக்கெதிராகப் போர்க் குரல் கொடுத்து களத்தில்  நின்ற வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் கொண்ட ஊர்திகளுக்கு இடமில்லை என்று மறுக்கப் பட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இவர்களைப் பெருமைப்படுத்தல், சிறப்பான எடுத்துக்காட்டுகளாக வரலாற்றின் தியாக ஏடுகளை நினைவூட்டுதல் என்ன தேச விரோதச் செயலா? புரியவில்லை! எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம் பெறக்கூடாது என்று மறுப்பதும்,  அது போலவே, சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்குப் போராடிய கேரளத்து  நாராயண குருவைப் பெருமைப்படுத்தும் ஊர்திக்கும் பேரணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வீரம் செறிந்த தியாகத்தை, விவரிக்கும் ஊர்திக்கும் இடம் இல்லையாம்! ஜனநாயகம் எப்படி நாட்டில் நாளும் சிதைக்கப்பட்டு, சீரழிவை நோக்கிச் செல்லுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு அல்லவா? ஒன்றிய  அரசு என்பதற்குப் பதிலாக மாநிலங்களின் உரிமை களைப் பறித்த ஒரே அரசு செயலுக்கு வந்துவிட்டது என்பதற்கான பிரகடனமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.