மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
பள்ளி கல்லூரி மாணவர்களின் கல்வி கொரோனா பெருந்தொற் றால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யிருக்கிறது. இந்த சூழலில் இருந்து ஓரளவு மீண்டு வரும் நேரத்தில், கர்நாடக மாநிலத்தில், கல்விநிலையங்களில் நடந்துவரும் நிகழ்ச்சிகள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவையாகும். மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிப்பவையாகும். இதுவரை மாணவர்கள் அவரவர் நம்பிக்கையுடன் இயல்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். ஆனால் கர்நாடகத்தில் இஸ்லாமிய மாணவி யரை குறிவைத்து, சங் பரிவார மாணவர் அமைப்பினர் மோசமாக நடந்துகொண்டுள்ளனர். மாணவியரின் கல்வியை கெடுக்கும் நோக்கத்துடன், ஹிஜாப் அணிவதை ஒரு சர்ச்சையாக மாற்றியதுடன், அந்த சர்ச்சையை வன்முறையாக வளர்த்தெடுக்கும் திட்டத்தோடு செயல்பட்டுள்ளார்கள்.
அனைத்து துறைகளிலும் பாஜக ஆட்சி அடைந்துள்ள தோல்வியை மறைப்பதற்கு, மத வெறி விஷத்தை மாணவர்கள் மத்தியில் விதைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். வெறியேற்றப்பட்ட கும்பலாக மாறிய மாணவர்கள், வன்முறை மிரட்டலில் இறங்குவதும், தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்றுவதுமான அலங்கோலங் கள் இப்போது கர்நாடகத்தில் நடந்திருக்கின்றன. இந்த போக்கினை கண்டித்து தனி ஒருவராக குரல் எழுப்பிய மாணவியின் எதிர்வினையும், உடனடியாக களத்திற்கு வந்த மாணவ-மாணவியர் ஆசிரியர்களின் செயலும் அவசிய மானவை. அதே நேரத்தில் “சக மாணவர்களுக்கு தண்டனை வேண்டாம். செய்தது தவறு என்பதை உணர்ந்தால் போதும்” என்று பேசியிருக்கும் இஸ்லாமிய மாணவியின் செயலும் பாராட்டுக்குரியது.
ஆனால், பாஜக அரசாங்கம் என்ன செய்தது? மாணவர்கள் மத்தியில் பிரச்சனையை விசிறிவிட்டு, மதவெறிக்கு தூபம் போடும் குயுக்தியை கையாண்டுள்ளது. இந்த போக்குதான் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களுக்கு அடிப்படையாகும். இதனை எங்கோ ஒரு மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களாக பார்க்க முடியாது. பாஜக - சங் பரிவாரத்தின் இப்படியான முயற்சிகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்யவை. மக்கள் ஒற்றுமை காத்திடவும், மாணவர் நலன் காக்கவும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக ஆர்த்தெழுவதுடன், கடும் கண்டனக் குரல்கள் எழுப்பிடுவோம்.