உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கான நிபந்தனைகளை தளர்த்திடுக!
தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை, அக். 18 - உதவிப் பேராசிரியர் பணி நியமனம் தொடர் பான அறிவிப்பாணையில் நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளை தளர்த்துமாறு, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத் துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகள் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், உதவிப் பேராசிரியர் பணியி டங்கள் தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப் பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில விதி முறைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும், அலைக்கழிப்பவையாகவும் அமைந்துள்ளன. எனவே, தமிழக அரசு தலையிட்டு, பொருத்த மான முறையில் மாற்றியமைப்பதுடன், காலியிடங் களை விரைந்து நிரப்புவதை உறுதி செய்ய வேண்டு மென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்து கிறது. விண்ணப்பம் செய்வதையே சிக்கலாக்குகின்றன! ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ் நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பு வதற்கு அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களின் மூலம் கல்லூரிகள் நடந்துவரும் நிலையில் இப்படியான அறிவிப்பு நம்பிக்கையளிப்பதாகும். ஆனால், புதிய அறிவிப்பாணையில் இடம்பெற் றுள்ள புதிய நடைமுறைகள், விண்ணப்பம் செய்வதையே சிக்கலாக்குகின்றன. புதிதாக தேர்வை புகுத்துவது தேவையற்றது விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வலியுறுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் (2018 மற்றும் 2023) அறிவிக்கையின்படி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய தகுதித் தேர்வு (NET) அல்லது முனைவர் பட்ட தேர்ச்சி இருந்தால் போதும். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம், புதிதாக எழுத்துத் தேர்வை புகுத்துவது தேவையற்றதாகும். விண்ணப்பத்தின் அடிப்படையில் மதிப்பெண் மற்றும் வகுப்புவாரியாக தரவரிசை தயார் செய்யப் பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளின் பின்னர் நேர்முகத் தேர்வு நடத்துவதே சரியாக இருக்கும். எத்தனை இடத்தில் நற்சான்று வாங்குவது? அதே போல, பணிக்கு தகுதியான ஒருவர் விண் ணப்பம் செய்யும்போதே கொடுக்க வேண்டிய கட்டாய ஆவணங்களில், கல்வித் தகுதிகளுக்கு இணையாக கடைசியாக படித்த கல்வி நிறுவ னத்தில் இருந்து நடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate) மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற அதி காரியிடமிருந்து நற்பண்புச் சான்றிதழ் (Character Certificate from a Gazatted Officer) கேட்கப்படு கிறது. இது நடைமுறை சாத்தியமற்றது ஆகும். அதி லும், விண்ணப்பம் செய்வோருக்கு அதிகபட்ச வயது 57 ஆக நிர்ணயித்துவிட்டு அவர் படித்த ஒவ்வொரு இடத்திலும் நடத்தை மற்றும் நற்பண்புச் சான்றிதழ் வாங்க நிர்ப்பந்திப்பது துன்புறுத்தலாக அமையும். படிப்பு சார்ந்தவற்றில் தளர்வுகள் தேவை எனவே, அனுபவச் சான்றுடன் விண்ணப்பிக் கும்படி விதியை தளர்த்தி அறிவிக்கலாம். முனை வர் பட்டம் படித்து, ஏற்கெனவே பல தனியார் கல்வி நிறுவனங்களில் பணியில் இருக்கும் தகுதி வாய்ந்த ஆசிரியரை இனம் காண அவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள் பற்றிய விதிகளை சேர்ப்பது உதவி செய்திடும். அவ்வாறே, தமிழ்வழி படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு தகுதியில், முதுகலை படிப்பு வரையில் தமிழைப் பயிற்று மொழியாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதியில் படிப்பு சார்ந்த தளர்வு கள் தேவைப்படுகின்றன. காலதாமதமின்றி நியமனங்களை மேற்கொள்க! ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 4.10.2019, 14.03.2024 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிவிக் கைகளை தொடர்ந்து, பலரும் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர். ஆனால், அதன் மூலம் நியமனங்கள் நடக்கவில்லை. ஆகவே, தற்போதைய அறிவிப்பாணையில் உரிய திருத்தங் கள் செய்வதுடன், இம்முறை காலதாமதம் இன்றி நியமனங்கள் நடந்தேறுவதை உறுதி வேண்டு மென சிபிஐ(எம்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.