tamilnadu

img

சைலேந்திரபாபுவை மீண்டும் நிராகரித்து ஆளுநர் அராஜகம்

சென்னை, அக்.24- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய தலைவராக, ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் நிராகரித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூன் மாதம் ஓய்வுபெற்றார். அதன்பின், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு டிஜிபி.யாக இருந்த சைலேந்திரபாபு, இந்தாண்டு ஜூனில்  பணி ஓய்வுபெற்றார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக அவரை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை, ஆளு நர் ஆர்.என். ரவிக்கு தமிழ்நாடு அரசு ஜூலை மாதம் அனுப்பியது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறை யாக பின்பற்றப்பட்டதா? தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது என பல்வேறு விளக்கங்களை கேட்டு, பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ரவி, ஆகஸ்டில் திருப்பி அனுப்பினார். இந்த கேள்விகளுக்கு, தமிழ் நாடு அரசு விரிவான விளக்கம் அளித்து,  மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப் பப்பட்டது. ஆனால், சைலேந்திர பாபுவை நியமிக்க வேண்டும் என்ற அரசின் பரிந்துரையை ஏற்காமல், ஆளுநர் ரவி இரண்டாவது முறை யாக நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல, டிஎன்பிஎஸ்சி. உறுப்பினராக சிவகுமார் என்பவரை நியமிக்க, தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரையையும், ஆளுநர் நிராகரித்து உள்ளார்.