ஜூன் 11இல் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி
ஈரோடு, ஜூன் 4- விஜயமங்கலம் சங்கச்சா வடி அருகில் ஜூன் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சியில் முதல்வர் பங்கேற்கவுள்ள நிலையில், அதுகுறித்த முன் னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய் தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜ யமங்கலம் சுங்கச்சாவடி அருகில் 10 மாவட் டங்கள் பங்கேற்கும் வேளாண் கண்காட்சி வரும் ஜூன் 11 ஆம் தேதி நடைபெறவுள் ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ள நிலையில், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற் கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் புத னன்று ஆய்வு செய்தனர். இதன்பின் அமைச் சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு ஜூன் 11,12 ஆகிய இரு தினங் கள் இந்த வேளாண் கண்காட்சி நடைபெற வுள்ளது. 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டவுள்ளது. உழவர்கள் சார்ந்த அரசின் அனைத்து திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள இக்கண்காட்சி வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏற்றுமதியா ளர்கள், உயர் அலுவலர்கள், பேராசிரி யர்கள் 25 தலைப்புகளின் கீழ் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல் களை வழங்கும் வகையில், 2 நாட்கள் கருத்த ரங்கம் நடைபெறவுள்ளது, என்றார். இந்த ஆய்வில், தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந் திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், காவல் கண் காணிப்பாளர் அ.சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.