tamilnadu

img

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் மின் கட்டணம் குறைப்பு

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, மின் கட்டண முறைகளை குறைத்து மாற்றி அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து செப்.23 சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2022-23 முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான காலத்திற்கான பல  ஆண்டு கட்டண (Multi Year Tariff)  மின்கட்டண மனுவை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணை யத்தின் (TNERC) முன்பு தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்  கழகம் (TANGEDCO), சமர்ப்பித் தது.  இதனால் ஏற்பட்ட மின்கட்டண மாற்றம் குறித்து, சிறு, குறு மற்றும்  நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்  றும் தொழில் அமைப்புகள் தெரி வித்த கோரிக்கைகளைப் பரி சீலித்து, அவர்களது நலனைப் பாது காக்கும் வகையில் கட்டணத்தை மாற்றி அமைத்திட தமிழக முதல மைச்சர் அறிவுறுத்தினார். இதன் படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மா னக் கழகத்திற்கு ஆண்டிற்கு ரூ. 2,000 கோடி வருவாய் குறைந்தா லும், தொழில்முனைவோரின் நல னைக் கருத்தில் கொண்டு, தொழிற்  சாலைகளுக்கு 50 கிலோவாட் வரை  உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ. 100 லிருந்து ரூ.75 எனவும் - 50 கிலோ வாட்டுக்கு மேல் 100 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான  கட்டணத்தை, ரூ.325லிருந்து ரூ.150  எனவும், 100 கிலோவாட் முதல் 112  கிலோவாட் வரை உத்தேசித்திருந்த  மாதம் நிலையான கட்டணத்தை  ஒன்றுக்கு ரூ.500 இல் இருந்து ரூ. 150 எனவும், 112 கிலோவாட்டுக்கு மேல் உத்தேசித்திருந்த நிலை யான கட்டணத்தை, மாதம் ஒன் றுக்கு ரூ.600 லிருந்து ரூ.550 என வும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று மாற்றியமைக்கப்பட்டது.

3.37 லட்சம் தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன் 

இதன் பின்னர், தொழில் மேம்  பாட்டிற்கான மேலும் நடவடிக்கை யாக, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு நுகர்வோர்களின் கோரிக்கைகளை ஏற்று, தாழ்வ ழுத்த தொழிற்சாலைகளுக்கான (LT IIIB) உச்சநேர நுகர்விற்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்திலி ருந்து 15 குறைத்து ஆணையிடப்  பட்டு, நடைமுறைப்படுத்தப்பட் டது. இந்த குறைக்கப்பட்ட கட்ட ணங்களுக்கான கூடுதல் மானிய மாக ஆண்டிற்கு ரூ.145 கோடி தமி ழக அரசு வழங்குகிறது. இதனால் சுமார் 3.37 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பல ஆண்டு  மின்கட்டண ஆணையின் படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரை யில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல்  ஆகியவற்றின் நுகர்வோர் விலைக்  குறியீட்டு எண்களின் படி கணக்கிட்  டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த  நடைமுறையை ஆய்வு செய்த தமி ழக முதலமைச்சர் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்களும் தொழில்துறை யினரும் பாதிக்கப்படாமல் இருப்  பதை உறுதிசெய்ய வேண்டும்  என்று அறிவுறுத்தினார். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு  செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்  டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022  ஏப்ரல் மாதத்தின் விலைக் குறி யீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை  குறியீட்டு எண் கணக்கில் எடுத் துக்கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 ரூபா யிலிருந்து 2.18 ரூபாயாக குறைக் கப்பட்டுள்ளது. 

இவ்வாறு தொழில்களின் நலம் காக்க தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளைத் தொட ர்ந்து, சிறு, குறு -நடுத்தர தொழில்  நிறுவனங்கள் மற்றும் நூற்பாலை களின் கோரிக்கைகள் தொடர்பாக  நிதி, மனிதவள மேம்பாடு -மின்சா ரத்துறை அமைச்சர், சிறு, குறு-நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அமைச்சர் மற்றும் கைத்தறி-துணி நூல் அமைச்சர் ஆகியோர் முன்னி லையில் 21.07.2023 அன்று தலை மைச்செயலகத்தில் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஜவுளித் தொழிலின் நிலைத் தன்மையை தமிழக முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் சென்றனர். முதல்வர் அறிவுறுத்தலின்  பேரில் கீழ்க்கண்ட சலுகைகள்  வழங்கப்படுகின்றன.

15 சதவீதம்  மூலதன மானியம் 
பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற் சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும் வகையில், அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக்கொள்ளவும், மேலும்  தேவைப்படும்போது அனு மதிக்கப்பட்ட மின்பளுவிற்குள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இச்சலுகையை ஆண்டு ஒன்றுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின்  உற்பத்தி செய்ய மின் இணைப்பு களுக்கு 15 சதவீதம் மூலதன மானி யம் வழங்கப்படும். 12 கிலோ வாட்டுக்கு குறைவாக  உள்ள சிறு, குறு தொழிற்சாலை களுக்கு வீதப்பட்டியல் IIIB லிருந்து  IIIA1 வீதப்பட்டியலுக்கு மாற்றுவது குறித்து தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துரு பெற்றபின் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடுமையான தொழில்நெருக் கடிகளைச் சந்தித்து வரும் சிறு- குறு, நடுத்தர தொழில் நிறுவனங் களை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உயர்த்தப்பட்ட  நிலைக் கட்டணத்தையும் பீக் ஹவர்  கட்டணத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி முத லமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் செப்டம்பர் 23 அன்று கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.