நீலகிரிக்கு ரெட் அலார்ட்: தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை
உதகை, ஜூன் 13– நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஜூன் 13) ரெட் அலார்ட் விடுக்கப் பட்டுள்ளதையடுத்து, உதகை மற் றும் மேட்டுப்பாளையத்திற்கு பேரி டர் மீட்புப் படைகள் வரவழைக்கப் பட்டு தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன. ஆந்திர கடலோரப் பகுதியில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி யின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய கனமழைக்கு வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நீல கிரி மற்றும் கோவை மாவட்டங்க ளுக்கு வெள்ளியன்று (நேற்று) கன மழைக்கான ஆரஞ்ச், இன்று (சனிக் கிழமை) மற்றும் நாளை (ஞாயிற் றுக்கிழமை) என இரண்டு நாட்க ளுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வா கம் மழை பாதிப்புகளை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை, தீய ணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் என அனைத்துத் துறை யினரும் தயார் நிலையில் உள்ள னர். மேலும், அரக்கோணத்திலி ருந்து ஆய்வாளர் கோபிநாத் தலை மையிலான 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் வரவழைக் கப்பட்டு உதகையில் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. கடந்த மே மாதம் 24 முதல் 29 ஆம் தேதி வரை நீலகிரியில் மிக கனமழை பெய்தது. அப்போது ரெட் அலார்ட் விடுக்கப்பட்டு, பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டு போக் குவரத்து பாதிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
ஆட்சியர் லட்சுமி பவ்யா பேட்டி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட் சுமி பவ்யா கூறுகையில், “இந்திய வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுத் துள்ளதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை உதகைக்கு வந்துள் ளது. மழையின் தீவிரத்தைப் பொறுத்து முக்கிய சுற்றுலாத் தலங்களை மூடுவது குறித்து ஆலோ சனைக் கூட்டம் நடத்தி பிறகு அறி விக்கப்படும். கனமழை பாதிப்புக ளைக் கண்காணிக்க மாவட்டம் முழு வதும் 43 கண்காணிப்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பொது மக்கள் அபாயகரமான இடங்களுக்கு செல்லக்கூடாது என்று ஏற்க னவே அறிவிக்கப்பட்டுள்ளது. நீல கிரிக்கு வரும் சுற்றுலாப் பயணி கள் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு களை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். கன மழையை ஒட்டி மூடப்படும் சுற்று லாத் தலங்களுக்குச் செல்லக் கூடாது. அபாயகரமான மரங்களின் கீழ் நிற்கவோ அல்லது வாகனங் களை நிறுத்த கூடாது, என்றார். முன்னதாக, மாணவர்களின் பாது காப்பு கருதி பள்ளிகளுக்கு சனி யன்று விடுமுறை அறிவிப்பு ஆட்சி யர் அலுவலகத்தில் இருந்து வெளி யிடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் பேரிடர் மீட்புப் படை:
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தலைமையில் 27 பேர் கொண்ட குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வில் ரப்பர் படகு, சக்தி வாய்ந்த டார்ச் லைட்டுகள், லைப் ஜாக்கெட் கள், விபத்துகளில் உதவும் ஸ்ட்ரெச் சர், 2.5 கிலோ வோல்ட் திறன் கொண்ட இரண்டு ஜெனரேட்டர் கள், பெரிய மரங்களை அறுக்கும் கையடக்க ரம்பம் உள்ளிட்ட 43 வகையான மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் உள் ளன. பவானி ஆற்றின் அருகே வினோபாஜி நகர் சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த மீட்புப் படையினர், ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உட னடியாக விரைந்து சென்று பாதிக் கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்களைக் காக்க வரவழைக்கப் பட்டுள்ளனர்.