தென்காசி, பிப்.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் மாதத்தில் நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. தென்காசியில் ஸ்ரீ நம்பி ஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் பி. உச்சிமாகாளி தலைமை வகித்தார். தென்காசி இடைக் கமிட்டி செயலாளர் ஆர். பட்டாபிராமன் வரவேற்றுப் பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி சிறப்புரை யாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி நிறைவுரையாற்றினார். பின்பு மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற்புக்குழு தலைவராக கண பதி, செயலாளராக பி.உச்சிமாகாளி, பொருளாளராக கண்ணன் மற்றும் 15 நிர்வாகிகள் உட்பட 117 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. அகில இந்திய மாநாட்டிற்கான நிதி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி யிடம் வழங்கப்பட்டது.