tamilnadu

img

தருமபுரியில் வரவேற்புக்குழு அமைப்பு

தருமபுரியில் வரவேற்புக்குழு அமைப்பு

போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநாடு

தருமபுரி, மே 20 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன (சிஐடியு) 16 ஆவது மாநில மாநாடு தருமபுரியில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் 16 ஆவது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகராசன் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளிலேயே தொழிலாளர்களுக்கு பணப்பயன்களை வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் முழுமையாக ஒதுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 16 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 5,6,7 ஆகிய தேதிகளில் தருமபுரி மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான வரவேற்புக்குழு தலைவராக எம்.சுருளிநாதன், செயலாளராக சி.நாகராசன், பொருளாளராக சி.முரளி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சண்முகம், செயலாளர் சி.ரகுபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, பொருளாளர் சி.கலாவதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், செயலாளர் ஏ.தெய்வானை, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் ஏ.மாதேஸ்வரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அருள்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.