மதுரை, டிச. 30- மதுரை மாநகராட்சியில் பணி நீக்கம் செய்யப் பட்ட 500-க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு ஒப்பந்த பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டிசம்பர் 30 அன்று மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்கள் பணி நீக்கப்பட்டதைக் கண்டி த்தும் மீண்டும் பணியில் சேர்க்கக்கோரியும் சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர் சங்கம், விடுதலை சிறுத்தை கள் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கடந்த இரண்டு தினங்களாக போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வியாழக்கிழமையன்று மாநகராட்சி ஆணையாளர் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் 80 பேர் மற்றும் தேர்ச்சி திறன் இல்லாத பாதாள சாக்கடை, பிட்டர், பம்பிங் ஸ்டேஷன், தெருவிளக்கு பிரிவுகளில் உள்ள 440 தொழிலாளர்கள் உட்பட 520 தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். தேர்ச்சி திறன் இல்லாத தொழிலாளர்கள் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி நெறிமுறை களுக்கு உட்பட்டு மாற்றுப்பணி கண்டறியப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க தலைவர்கள் கூறினர். மாநகராட்சி தொழி லாளர்களின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறினர். மாநகராட்சி ஆணை யாளர் கார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தையின் போது சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிற்சங்க பொதுச் செயலாளர் ம. பாலசுப்பிரமணியம், தலைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், கருப்பசாமி ,விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கம் சார்பில் நகர் மாவட்ட அமைப்பாளர் பூமிநாதன், முத்து, தமிழ்நாடு சுகாதார பணியாளர் சங்க பொதுச்செயலாளர் அம்சராஜ், தலைவர் பட்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் துணைஆணையாளர் சங்கீதா, பொறியாளர் அரசு பேச்சுவார்த்தையின் போது உடனிருந்தனர்.