சென்னை, ஜூலை 7 - திரைத்துறையில் கம்யூ னிஸ்ட்டுகள் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதற்கு உதாரண மாக ராமு திகழ்ந்தார் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தி னார். இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து, வாலிபர் சங்கத்தை கட்டியமைத்து, தமுஎகச-வை வளர்த்தெடுத்தவர். கலைஇரவு என்ற வடிவத்தை கருக்கொள்ளச் செய்து பண்பாட்டு தளத்திற்கு பெரும் பங்காற்றியவர். ‘டயர் தட்டி’ என்ற பிரச்சாரக் கருவி யை கண்டுபிடித்து, அதை தமி ழகம் பற்றிக் கொள்ள வினை யூக்கியாக இருந்தவர். ஆட்டோ ஓட்டுநராக, வீதிநாடக கலைஞ ராக, திரைக் கலைஞராக பரிண மித்தவர் தோழர் ராமு.
மறைந்த தோழர் வ.ராமு புகழஞ்சலிக் கூட்டம் ஜூலை 6 புதனன்று சைதாப்பேட்டையில், சிபிஎம் சைதை தோழர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் பேசுகையில், “கலை இரவு என்ற வடி வத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ராமு, வாழ்நா ளின் பெரும்பகுதியை இயக்கத் திற்காக செலவிட்டார். மக்கள் இயக்க ஊழியர், களப்போராளி, தமுஎகச நிர்வாகி, திரைக் லைஞர் என பன்முகம் கொண்டிருந்தார். நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந் தெடுத்து நடித்து புகழ்பெற்ற போதும், தன்னை சாதாரண மனித னாக கருதி எளிமையோடு வாழ்ந்தார்.” என்று புகழஞ்சலி செலுத்தினார். “சமூகத்திற்கு அயராது அர்ப்பணிப்போடு பணியாற்றுகிற கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கட்சிக்குள் தமது கருத்திற்காக கடுமையாக போராடினார். நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு ராமு வின் வாழ்க்கையை உதாரண மாக எடுத்துக் கொள்ளவேண்டும். ராமுவின் மறைவு திரைத்துறைக் கும் இடதுசாரி இயக்கத்திற்கும் இழப்பு” என்று குறிப்பிட்ட கே. பாலகிருஷ்ணன், “ஜனநாயகம், மதச்சார்பின்மை, மனித உரிமை, பொருளாதாரத்தை காக்க இடது சாரிகள் அச்சாணியாக இருந்து பணியாற்ற வேண்டி உள்ளது. அதற்கேற்ப உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
உணர்வு ரீதியான உறவு
“பாரத் பந்த் அறிவிக்கப்பட்ட போது, ரயிலை நிறுத்துவது என்று முடிவெடுத்தோம். சமயோசித மாக யோசித்த ராமு, தண்ட வாளங்களில் முழுக்க சிவப்புக் கொடியை நட்டு, ரயில்களை நிறுத்திவிட்டார்” என்ற சுவாரசிய தகவலோடு தனது அஞ்சலி யுரையை துவக்கிய சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், “மனிதகுலத் தின் மீதான காதலை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த ராமு, தனது இயல்புக்கு உகந்த கதாப்பாத்திரங்களை தேர்ந்தெ டுத்து நடித்தார். அவரிடம் பழகா தவர்கள் கூட உணர்வு ரீதியான உறவு கொண்டிருந்தனர். பல புதுமைகளை படைத்த சைதை பகுதி, அவரின்றி பெருமை கொள்ள முடியாது” என்றார்.
நல்ல மனிதர் - கம்யூனிஸ்ட்
மனிதர்கள் கம்யூனிஸ்ட்டாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்ட எடிட்டர் பி.லெனின், “என்னுடைய படத்தில்தான் முதன்முதலில் ராமு நடித்தார். அவர் எமோஷன் ஆகமாட்டார். ஆனால் பேச்சினூடே விமர்சித்துக் கொண்டே இருப்பார். தமுஎகச மீது இறுதிவரை காதல் கொண் டிருந்தார். அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்” என்றார்.
தனித்த குணாதிசயம்
தமது முதல்படமான ‘நெடுநல் வாடை’யில் முதன்மை கதாபாத் திரம் ஏற்று ராமு நடித்ததை யும், அவருடனான தனது அனு பவங்களையும் பகிர்ந்து கொண்ட இயக்குநர் செல்வகண்ணன், தோழர் ராமு அளவிற்கு குணாதி சயம் கொண்டவர்கள் திரைத் துறையில் எவரும் இல்லை. அவர் நடிக்க வேண்டிய கதாப் பாத்திரங்களை நடிப்பதற்கு வேறு நபர்கள் இல்லை. உயிரோடு இருந்திருந்தால் அவரால் பல குடும்பங்கள் பயனடைந்திருக்கும் என்றார்.
நம்பிக்கையூட்டி
‘க/பெ ரணசிங்கம்’ திரைப் படத்தில் விஜய் சேதுபதியின் அப்பாவாக எனது தந்தையை நடிக்க வைக்க திட்டமிட்டிருந் தேன். அவர் இறந்துவிட்டதால் அந்த இடத்தில் ராமுவை நடிக்க வைத்தேன். ஏனெனில் எனக்கு தகப்பனாக அவர் விளங்கினார் என்று கண் கலங்கிய இயக்கு நர் பி.விருமாண்டி, எந்த பிரச்ச னை வந்தாலும், ‘விடு பார்த்துக் கொள்ளலாம்’ என்று நம்பிக்கை யூட்டுவார் என்றார். ‘கிடா’ என்ற படத்தில் ராமுவின் பேரனாக எனது மகனை நடிக்க வைத்துள்ளேன். அடுத்து இயக்க உள்ள படத்தின் துவக்க காட்சி யில் ‘காயம்பு’ கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் மறைந்து விட்டார் என்று தழுதழுத்தார். தமுஎகச மாநில துணைச் செயலாளர் கி.அன்பரசன் பேசு கையில், “போராட்டங்களை லாவகமாக, ஆக்ரோஷமாக கையாளக் கூடியவர். நிகழ்வு களுக்கான அழைப்பிதழ்களை கலை நயத்தோடு, புதுமையாக வடிவமைக்கும் ஆற்றலாளர். சவால்களை சந்திக்கக் கூடியவ ராக இருந்தார்” என்றார்.
முதலாளித்துவ சமூக அமைப்பு மனிதர்களை வடிவமைக்கிறது; கட்சி தோழர்களை வடிவமைக் கிறது. இந்த இரண்டு வடி வமைப்புக்குள்ளும் உட்படாதவர் ராமு. ஆனால் எப்போதும் கட்சியை பற்றி சிந்திக்கக் கூடிய வர் என்று தமுஎகச செயற்குழு உறுப்பினர் கவிஞர் சைதை ஜெ. குறிப்பிட்டார். இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் தலைமை வகித்தார். எம்.சரஸ்வதி எம்.சி., சிபிஎம் சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன், திரைக்கலைஞர் பிளாக்பாண்டி, சிந்தன்புக்ஸ் க.மாதவ், பத்திரிகை யாளர் லியோ சக்கரவர்த்தி, தீக்கதிர் சி.கல்யாணசுந்தரம், ராமுவின் மகள் மகாலட்சுமி உள் ளிட்டோர் புகழஞ்சலிசெலுத்தினர்.