tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலை வீரர்களின் பதாகைகளை ஏந்தி பேரணி

விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி மறுத்ததைக் கண்டித்தும் விடுதலை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாகவும் தமிழகம் முழுவதும் குடியரசுத் தினத்தன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலை வீரர்களின் பதாகைகளை ஏந்தி பேரணி நடத்தியது. திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக வாலிபர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.அருள் தலைமை வகித்தார். இதில், மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பா.கௌசல்யா, மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்பட இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.