tamilnadu

img

மணிப்பூர் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ரயில் மறியல்

சென்னை, ஜூலை 22- மணிப்பூரில் நடைபெற்று வரும் இனப் படுகொலையை தடுக்க வலியுறுத்தியும், பெண்களை கும்பல் பலாத்காரம் செய்த குற்ற வாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொருக்குப்பேட்டை - கத்தி வாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் தலைமையில் ஊர்வலமாகச் சென்றனர். ரயில்வே கேட் அருகே காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.பி. சரவணத்தமிழன், நிர்வாகிகள் ச.முருகேசன், எஸ்.கார்த்திக், கு.சுரேஷ், சா.நீதிதேவன், விஜய், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.நிதீஷ், நிர்வாகிகள் குணா, ஐஸ்வர்யா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார், பொருளாளர் வி. ஆனந்தன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் எஸ்.கே.மகேந்திரன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இரண்டு பேர் பாஜகவைச் சேர்ந்த மத வெறி யர்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு, கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கி றார்கள். இந்த சம்பவம் நடைபெற்று 77 நாட்க ளுக்கு பிறகு சமூக வலைதளங்கள், ஊட கங்கள் மூலம் வெளிவந்த பிறகு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ராணுவ வீரரின் மனைவிக்கே  இந்த கதி என்றால்.....

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவ ருடைய கணவர் இந்திய ராணுவத்தில் பணி யாற்றி தேச பாதுகாப்பை உறுதிப்படுத்தியவர். அவருடைய மனைவி பாஜகவைச் சேர்ந்தவர்க ளால் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வல்லு றவுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார் என்றால் பாஜகவின் தேச பக்தியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற நூற்றுக் கணக்கான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அந்த மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த முதல மைச்சர் பைரேன் சிங்கே தெரிவித்துள்ளார்.  கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிராக பாஜகவி னரால் இனவெறி படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல தேவாலயங்கள், குடியிருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறையால் அந்த மாநிலத்தில் ஒரு இனமே அழிந்து போகக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

முதலமைச்சரை கைது செய்க! 

கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு, மகளிர் ஆணையம் மாநிலத் தலைமைச் செயலாளர், காவல் துறை தலை வர் ஆகியோருக்கு தொடர்ச்சியாக 3 கடிதங் கள் எழுதியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மகளிர் ஆணைய தலைவர் தற்போது தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களை கண்டு கொள்ளாத பைரேன் சிங் தலைமையிலான அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு, முதலமைச் சரை கைது செய்ய வேண்டும். தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஒன்றிய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென் றால் பல்வேறு சமூக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை தீவிரப் படுத்துவோம் என்றார்.