tamilnadu

img

ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு சிபிஎம் மறியல்

பெருமளவில் இளைஞர்கள், பெண்கள் உட்பட ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை, செப். 7 - விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தாத, வேலைவாய்ப்பை உரு வாக்க லாயக்கற்ற ஒன்றிய மோடி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  சார்பில் வியாழனன்று (செப்.7) தமிழ்நாடு முழுவதும் மறியல் போர் நடைபெற்றது. இதில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 50ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டு, மாலை யில் விடுவிக்கப்பட்டனர். வேலையை அடிப்படை உரிமை யாக்க வேண்டும், தற்போது வேலை யில் இருப்பவர்களுக்கு சமூகப் பாது காப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும், தனியார் துறையில் இட  ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும், பின்னடைவு காலி பணியிடங் கள் உள்ளிட்ட காலி பணியிடங்கள் முழு வதையும் உடனடியாக நிரப்ப வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை, முழுமை யான கூலி வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும், அதற்கேற்ப நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.1 முதல் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக செப்.7 அன்று ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு, ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தென் சென்னை

இதன் ஒரு பகுதியாக தென் சென்னை மாவட்டம், கிண்டி ரயில் நிலை யத்தில் மறியல் நடைபெற்றது. ஜிஎஸ்டி  சாலையில் இருந்து  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை யில், மாவட்டச் செயலாளர் ஆர். வேல் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் வெ. ராஜசேகரன் உள்ளிட்டு 1500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று  ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். கடற்கரை நோக்கி சென்ற புறநகர் ரயி லை மறித்து முழக்கமிட்டனர். இதை யடுத்து அனைவரும் காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டனர்.

வடசென்னை

வடசென்னை மாவட்டத்தில் 3 மையங்களில் மறியல் நடைபெற்றது. மூலக்கடை யூகோ வங்கி முன்பு அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.  ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமையிலும், திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் இருந்து ஊர்வலமாக சென்று அஞ்சல கம் முன்பு மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையிலும், திரு முல்லைவாயில் இந்தியன் வங்கி முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையிலும் மறியல் நடைபெற்றது. இந்த மூன்று மையங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய சென்னை

மத்திய சென்னை மாவட்டம் சார்பில் அண்ணாசாலை தலைமை அஞ்சல கம் முன்பு மத்தியக் குழு உறுப்பினர்  பி.சம்பத் தலைமையில் நடைபெற்ற மறி யலில் மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்டு நூற்றுக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.  திருவாரூர் மாவட்டத்தில் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றார்.  மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இம்மறியல் போராட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச்  செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். 

உள்ளதையும் பறித்த மோடி அரசு: கே.பாலகிருஷ்ணன்

மறியல் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் கே.பால கிருஷ்ணன் கூறியதாவது:- ஒன்றிய அரசின் தவறான பொருளா தாரக் கொள்கையின் காரணமாக விலை வாசி விஷம் போல் ஏறி உள்ளது. உணவுப் பொருட்களை வாங்கி சமாளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர, உழைக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை  கொடுப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, பணியில் இருந்த பல கோடி இளைஞர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டுள்ளனர். வேலை கொடுக்க லாயக்கற்றதாக ஒன்றிய அரசு உள்ளது. உருப்படாத திட்டங்களை செயல்படுத்துவதால், இளைஞர்கள் வேலை யின்றி வாடிக்கொண்டு இருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை, சிஏஜி அறிக்கையில் வெளிப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களை திசை திருப்ப ஒன்றிய அரசு, ஆட்சியாளர் களும் சதி செய்கின்றனர். இதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சனையை எழுப்பு கின்றனர். சனாதனத்தை எதிர்த்துப் பேசி விட்டார்கள் என்று நாடு முழுவதும் பதற்றமான நிலையை உருவாக்குகின்றனர்.  இத்தகைய திசை திருப்பல்கள் மூலம் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. உழைப் பாளி மக்களின் சிந்தனையை மழுங்கடிக்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற இந்த போராட்டம், நாளை ‘இந்தி யா’ கூட்டணி நடத்தப் போகிற மகத்தான நாடு தழுவிய போராட்டமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

மோடி அரசை வீழ்த்துவோம்: ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களின் விலையை குறைப்போம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம், விவ சாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு 9 ஆண்டுகளில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. அனைத்து அத்தி யாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதி கரித்துள்ளது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அவல நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாத ஒன்றிய மோடி அரசு, கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய 15 லட்சம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்துள்ளது. மோடி அரசு ஏழை, எளிய மக்களுக்கான அரசு அல்ல, மாறாக அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளி களுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசு என்றும் அவர் கடுமை யாக சாடினார். நாட்டின் அரசியலமைப்பு சட்டம், சமத்து வம், பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை, பெண்களின் உரிமை, மாநில உரிமை, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் சாதி, மதம், அரசியல் கடந்து அனைவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதேச்சதிகார பாஜக ஆட்சியை வீழ்த்த முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

காவல்துறை அராஜகம்

மறியல் போராட்டத்தின் போது  சில இடங்களில் காவல்துறை யினர் அராஜகமாக நடந்து கொண் டனர். மத்திய  சென்னையில்  காவல்துறை இணை ஆணையர் உள்ளிட்ட காவல் துறையினர் மூர்க்கமாக நடந்து கொண்டனர். கட்சித் தலைவர்களை  காவல் துறையினர் இழுத்துச் சென்று கைது செய்ய முற்பட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பெண்கள் உட்பட பலரையும் காவல்துறை யினர் சாலையில் இழுத்துசென்று கைது செய்தனர். ம.உதயகுமார், தமிழ், லோகபிரான் உள்ளிட்ட பலருக்கும் காயம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை இந்தியன் வங்கி  முன்பு நடைபெற்ற மறியலில்  காவல்துறையினரின் தாக்குதலில் கட்சியின் திருநாவலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார், மாதர் சங்க உளுந்தூர்பேட்டை நகரச் செயலாளர் வீ.சந்திரா மற்றும் கே.தங்க ராசு உள்ளிட்டோர் காயம் அடைந் தனர். இவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டது.  மயக்கம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் அராஜகமாக நடந்து கொண்டனர். இதில் கீழே விழுந்த அஞ்சாபுலி மயக்கமுற்றார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் மருத்துவ மனைக்கு சென்று அஞ்சாபுலியை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.