tamilnadu

img

செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய்  தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

தஞ்சாவூர், ஏப்.27-  தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் கால்நடை பன்முக மருத்துவமனையில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், உலக  கால்நடை மருத்துவ தினத்தினை முன்னிட்டு,  சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கால்நடைகளின் ஆரோக்கியம், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாது காப்பதில் கால்நடை மருத்துவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமை உலக கால்நடை மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தஞ்சாவூர் கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட தஞ்சா வூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை  மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் காலை 8 மணி முதல் 12 வரை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி பணி  இலவசமாக மேற்கொள் ளப்படுகிறது. பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் செல்லப்பிராணிகளுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் இலவச மாக வெறிநோய் தடுப்பூசி மேற்கொண்டு பயனுற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பன்முக கால்நடை மருத்துவமனையில், சனிக்கிழமை 123 செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.