tamilnadu

img

சிபிஎம் சிவகங்கை மாவட்டச் செயலாளராக ஆர்.கே. தண்டியப்பன் தேர்வு

சிவகங்கை,டிச.31-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட 23 ஆவது மாநாடு திருப்புவனம் அருகே மடப்புரத்தில் டிசம்பர் 29, 30  ஆகிய தேதிகளில்  நடை பெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் பேசினார் . மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் வாழ்த்திப் பேசினார். மாநி லக்குழு உறுப்பினர் கே.சாமு வேல் ராஜ் நிறைவுரையாற்றி னார். வரவேற்புக்குழு தலை வர் எம்.சக்திவேல் நன்றி கூறினார். மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக ஆர்.கே. தண்டியப்பன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக கே. வீரபாண்டி, கருப்புச்சாமி, மோகன், ஆறு முகம், மணியம்மா, சேதுரா மன், சுரேஷ்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  நெல் கொள்முதல் நிலை யங்களை பிர்க்கா (உள் வட்டம்) வாரியாக தொடங்க வேண்டும்.  

சிவகங்கை அருகே 900 ஏக்கர் பரப்பள வில் கிடைக்கும்  கிராபைட் கனிமத்தை பயன்படுத்தி 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிற திட்டத்தை தொடங்க வேண்டும். வைகை ஆற்றில் இடதுபுற மாக செல்கிற கால்வாய் களை மேம்படுத்த வேண்டும். காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர், மேலூர் வழி யாக மதுரைக்கு ரயில்வே  பாதையை உருவாக்க வேண்டும். மானாமதுரை யில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும்.  காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை முழு மையாக விரைவில் செயல் படுத்த வேண்டும். கோவிலூர் கெமிக்கல் ஆலையை உடன டியாக மூட வேண்டும். பிரான் மலை மலைப்பகுதியில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். மலைப்பகுதியை உடைப் பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.