தேனி, பிப்.5- தேனி மாவட்ட புதிய ஆட்சி யராக ஆர்.வீ.ஷஜீவனா பொறுப் பேற்றார். தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன், இந்து அறநிலையத் துறை இணை ஆணையராக பணி யிட மாற்றம் செய்யப்பட்டார். இவ ருக்கு பதிலாக செங்கல்பட்டு மாவட் டத்தில் சார் ஆட்சி யராக பணியாற்றிய ஆர்.வீ.ஷஜீவனா, தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, பொறுப் பேற்றார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.வீ. ஷஜீவனா, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சித் துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், புது வாழ்வுத் திட்டம், மாநில தேர்தல் ஆணையம், மாநில திட்டக் குழு, உங்கள் தொகுதியில் முதல்வர் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி யுள்ளார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற வர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஷஜீவனா, அரசு நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் உரிய இலக்கு மக்களை சென்றடைவதற்கும், பெண்கள், குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும் என்றார்.