தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், பு.ரேவதி தம்பதியின் மகள் பு.அர்ச்சனா, ஆர்.ராஜேந்தர் குமார் ஆர்.விஜயலட்சுமி தம்பதியின் மகன் ஆர்.நீரஜ் திருமண வரவேற்பு விழா சிஐடியு உதவி பொதுச்செயலாளர் வி.குமார் தலைமையில் செங்குன்றத்தில் சனிக்கிழமை (ஜூன் 24) நடைபெற்றது. சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், பகுதி செயலாளர் அ.விஜயகுமார், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், க.இளவரி (ஐஎன்டியுசி), சண்முகவேல் (எல்டியுசி), எஸ்.கே.மாறன் (பாட்டாளி தொழிற்சங்கம்), சங்கத்தின் பொருளாளர் ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதி ரூ7 ஆயிரம் வழங்கப்பட்டது.