tamilnadu

img

சிபிஎம் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக ஆர்.செல்லசுவாமி தேர்வு

குழித்துறை, மார்ச் 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக ஆர்.செல்ல சுவாமி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் கன்னியாகுமரி மாவட்ட மாநாடு மார்த்தாண்டம், ஒய்எம்சிஏ அரங்கில் (தோழர்கள் வி.கே.இஸ்மாயில், டி.ஆர்.மேரி நினைவரங்கம்) கடந்த 19, 20  (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில்  நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் வாழ்த்தி பேசினார். மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். மாநாட்டில் 41 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு தேர்வு  செய்யப்பட்டது. மாவட்ட செய லாளராக ஆர்.செல்லசுவாமி தேர்வு செய்யப்பட்டார்.

அவரு டன் ஆர்.லீமாறோஸ், எம்.அண் ணாதுரை, ஏ.வி.பெல்லார்மின், எம்.அகமது உசேன், கே.தங்க மோகன், என்.எஸ்.கண்ணன், என்.உஷாபாசி, எஸ்.ஆர்.சேகர், எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், பி. விஜயமோகனன், வி.அனந்த சேகர், எஸ்.அந்தோணி ஆகிய 13 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.   கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இஎஸ்ஐ பன்னோக்கு மருத்துவமனை அமைக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குமரி மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் வாழ்ந்து வரும் விவசாயிகளின் கைவச நிலங்களையும், குடியிருப்பு களையும் பாதுகாத்திட தமிழக அரசையும்  மாவட்ட நிர்வாகத்தை யும் கேட்டுக்கொண்டும், செண் பகராமன்புதூரில் அமைக்கப் பட்டுள்ள அரசு கொள்முதல் நிலையம், தென்னை மதிப்பு கூட்டு மையத்தை திறந்து செயல் படுத்தவும் தென்னை ஆராய்ச்சி  மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரியும், ரப்பர் விவ சாயத்தை பாதுகாக்க கேரளா வைப் போல் விலை நிர்ணயம் செய்யவும், ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.