tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டையொட்டி வினா-வினா போட்டி

கண்ணூர், ஏப்.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 6-அன்று கண்ணூரில் தொடங்குகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக ‘உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாறு’ குறித்த மெகா வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்றவர்களை மட்டுமல்ல; பார்வையாளர்களையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை குறித்து அறிந்துகொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. போட்டியை கிராண்ட் மாஸ்டர் ஜி.எஸ்.பிரதீப் துவக்கி வைத்தார். போட்டி நடைபெற்ற இடத்தில் அரிவாள் - சுத்தியல் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்து. ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ பிறந்த கதையுடன் போட்டி தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. முதல் சுற்றில் சுமார் 200 அணிகள் பங்கேற்றன. மெகா வினாடி வினா போட்டிக்கு அதிக புள்ளிகள் பெற்ற ஆறு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.  

ஸ்ரீநந்த் சுதீஷ், டி.ஆனந்தன் (கண்ணூர்), பிரசாத் கலவயல்-கே.பிரபாகரன் (காசர்கோடு), டி. மோகன்தாஸ்-என்.ஜி. ஜினீஷ் (கண்ணூர்), டெசின்சைமன் (பத்தனம்திட்டா)-ஆர்.ஷிபு (கொல்லம்), வி.ஆர்.அனந்து-ஆர்.சரத் (கொல்லம்), கே.பத்மநாபன் மற்றும் பி.ஐ. ஷெரீப் (காசர்கோடு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடக்க விழாவுக்கு எம்.வி.ஜெயராஜன் தலைமை வகித்தார். ஏ.பி.அன்வீர், நாராயணன் கவும்பாய் ஆகியோர் பேசினர். வி.ஆர்.ஆனந்து-வி.ஆர்.சரத் அணி மெகா வினாடி-வினா போட்டியில் முதலிடம் பெற்றது. அவர்கள் அணி 146 மதிப்பெண்கள் பெற்றது. 135 மதிப்பெண்கள் பெற்ற டி.மோகன்தாஸ் இரண்டாம் இடம் பிடித்தார். டெசின்சைமன்-ஆர்.ஷிபு அணி 131 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 6-ஆம் தேதி கண்ணூரில் தொடங்குகிறது. இதையொட்டி மாநாட்டு அரங்கை அழகுறச் செய்யும் ஓவியங்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 6-அன்று கண்ணூரில் தொடங்குகிறது.  இதையொட்டி மாணவிகள் நடத்திய பிரச்சாரம்.