உயர்நீதிமன்றத்தில் வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை, ஜூன் 21- அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒப்பந்த அடிப் படையில் பணியமர்த்தப்பட்ட உத்தரவை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை இளை யான்குடி பகுதியை சேர்ந்த தங்க முனி யாண்டி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் பிஎச்டி முடித்துவிட்டு, பேராசிரியர் பணிக் காக காத்துள்ளேன். அண்ணாமலை பல்க லைக்கழகத்தை அரசு ஏற்றதும், பல்க லைகழகத்தால் நியமிக்கப்பட்ட 370 உபரி ஆசிரியர்கள், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரிகளில் பல்வேறு துறைகளில் பணி யமர்த்தப்பட்டனர். 370 உபரி ஆசிரியர்களை அண்ணா மலை பல்கலைக்கழகம் விதிகளை மீறி நிய மனம் செய்துள்ளது என்ற புகாரின் அடிப்ப டையில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களின் பணியை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. இதனால் புதிதாக பட்டம் பெற்று பிஎச்டி முடித்து தகுதியுள்ள ஆசிரியர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் பணியில் சேர முடியாமல் அவ திப்படுகின்றனர். எனவே பணியை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் ஒப்பந்த அடிப்படையில் பணிய மர்த்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலே பணியமர்த்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை செவ்வா யன்று நீதிபதி ரமேஷ் முன்பு நடைபெற் றது. அப்போது, தமிழக உயர்கல்வித் துறை செயலாளர்,கல்லூரிக் கல்வி இயக் குநர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.