பஞ்சாப் விவசாயிகள் 3-வது நாளாக மறியல் முழுமையாக முடங்கிய ரயில் வட இந்தியாவின் வெள்ள பாதிப்பு களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிவாரண நிதி, எம்.எஸ்.சுவாமி நாதன் குழு அறிக்கையின் படி, குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வமான உறுதி ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி வியாழக்கிழமை (செப்.28) முதல் பஞ்சாப் விவசாய அமைப்புகள் ரித் கோட், சாம்ராலா, மோகா, ஹோசி யார்பூர், குர்தாஸ்புர், ஜலந்தர், டர்ன் டாரன், பாட்டியாலா, பரோஸ்பூர், பதிண்டா மற்றும் அமிர்தசரஸ் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் தண்ட வாளங்களில் அமர்ந்து போராடி வரு கின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை யும், ரயில் மறியல் போராட்டத்தையும் ஆளும் ஆம் ஆத்மி அரசு கண்டுகொள்ளா மல் இருக்கும் நிலையில், சனிக்கிழமை யன்றுடன் ரயில் மறியல் போராட்டம் 3 நாட் களை கடந்து விட்டது. இந்த மறியல் போராட்டத்தினால் ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில் கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளன. தடம் மாற்றி விடப்பட்டுள்ளன. ரயில் பயணத்தை நம்பி யுள்ள பஞ்சாப், ஹரியானா மாநில பயணி கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.2,000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு கடந்த மே மாதம் 19 அன்று ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், கேஒய்சி மற்றும் இதர முறையான ஆவ ணங்களைக் கொண்டு வரம்பு இல்லாமல் தனது வங்கிக் கணக்கு களில் டெபாசிட் செய்து செப்டம்பர் 30 வரை மாற்றிக் கொள்ள லாம் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பின் படி ரூ.2,000 நோட்டு களை மாற்றுவதற்கு சனியன்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 7 அன்று வரை அவகாசத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டில் புழக்கத்திலி ருந்த 93 சதவிகித ரூ.2000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாக செப்.1ல் ஆர்.பி.ஐ. அறிவித்தது.