tamilnadu

img

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சண்டிகர். பிப்.20- பஞ்சாப்பில் தேர்தல் வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 20 விறுவிறுப்பாக நடைபெற்றது.  பஞ்சாபில் 117 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 93 பெண்கள், 2 திரு நங்கைகள் உள்பட 1,304 வேட்பா ளர்கள் களத்தில் உள்ளனர். போட்டி யிட்டவர்களில் 315 பேர் குற்றவியல் பின்னணி கொண்டவர்கள். 1,12,98,081 ஆண்கள், 1,02,00,996 பெண்கள் மற்றும் 727 திரு நங்கைகள் உட்பட 2,14,99,804 வாக்கா ளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்ற வர்கள்.  வாக்களிக்க 24,689 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 2,952 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப் பட்டிருந்தன.

காலை ஏழு மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை  நிறைவடைந்தது. பல நகரங்களி லும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்த னர். ஜலந்தர் உள்ளிட்ட நகரங்களில் காலை முதலே விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.  மாநிலத்தில் கடந்த ஜனவரி 9 அன்று தேர்தல் நடத்தை விதிகள்  அமலுக்கு வந்தன. அன்று முதல் கடந்த 18-ம் தேதி வரை ரூ.500 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட் கள், மதுபானம், ரொக்க பணம்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. தேர்தல் விதிமீறல் தொடர் பாக 3,467 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. இத்தேர்த லில் ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக கூட்டணி, ஆம்  ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பதார் மற்றும் சம்கவுர்  சாகிப் ஆகிய இரண்டு தொகுதி களில் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத் சிங் சித்து அமிர்த சரஸ் கிழக்கு தொகுதியில் போட்டி யிடுகிறார். அவரை எதிர்த்து அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதா களத்தில் இருப்பதால் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவரு மான அமரிந்தர் சிங், பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுகிறார். அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2012, 2017 தேர்தல்களில் இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பெரோஸிபூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதால் ஜலாலாபாத் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜி னாமா செய்தார். தற்போது அதே தொகுதியில் அவர் மீண்டும் போட்டி யிடுகிறார். அவருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் சிங்குக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

முன்னாள் முதல்வரும் அகாலி தளத்தின் மூத்த தலைவருமான பிர காஷ் சிங் பாதல் (94), லம்பி தொகுதி யில் மீண்டும் களமிறங்கியுள்ளார். வயது முதுமை காரணமாக அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இந்தத் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவியது. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பகவந்த் மான், தூரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி யில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக,  அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 77, ஆம் ஆத்மி 20, அகாலி தளம் 15, பாஜக 3 இடங்களைக் கைப்பற்றின என்பது நினைவு கூரத்தக்கது.