tamilnadu

img

வாலிபர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு பேரணியுடன் தொடங்கியது

வாலிபர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு பேரணியுடன் தொடங்கியது

புதுக்கோட்டை, செப். 16-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 17 ஆவது மாநாடு, கறம்பக்குடியில் பேரணி-பொதுக்கூட்டத்துடன் செவ்வாய்க்கிழமை ஏழுச்சியுடன் தொடங்கியது. கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய பேரணியை, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக விண் அதிரும் கோரிக்கை முழக்கங்களுடன் வந்த இளைஞர்களின் பேரணி பொதுக்கூட்டம் நடைபெறும் வள்ளுவர் திடலை வந்தடைந்தது. பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை, சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்டச் செயலாளர் ஆர்.மகாதீர், துணைத் தலைவர் கஸ்தூரி உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக வரவேற்புகுழு செயலாளர் ஆர்.தினேஷ் வரவேற்க, வரவேற்புக்குழு பொருளாளர் துரை.அரிபாஸ்கர் நன்றி கூறினார்.