tamilnadu

img

தொடர்ந்து இந்தியில் கேள்வித்தாள் வெளியிடும் மோடி அரசு

ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம் பி., கடிதம்

மதுரை,அக்.7-  ஒன்றிய அரசில் 20 ஆயிரம் காலிப்பணியிடங் களை நிரப்பும் தேர்வில்  தமிழ் மற்றும் மாநில மொழி களில்  கேள்வித்தாள் வெளி யிட வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கிற்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பணியாளர், பொது மக்கள் குறைகள் -ஓய்வூதிய துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந் திர சிங்கிற்கு சு. வெங்கடே சன் எம்.பி. எழுதியுள்ள கடிதம் வருமாறு: ஒன்றிய அரசு அமைச்ச கங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீர்ப்பா யங்கள் உள்ளிட்ட இடங் களில் உள்ள 20 ஆயிரம் காலி யிடங்களுக்கு “ஸ்டாப் செலக்சன் கமிசன்” பணி நியமன அறிவிக்கையை 17.09.2022 அன்று வெளி யிட்டுள்ளது. இது மிகப் பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு ஆகும். ஒரு கோடி பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. 

பணி நியமனத் தேர்வுக் கான கேள்வித் தாள் இரண்டு மொழிகளில் மட்டுமே -  இந்தி, ஆங்கிலம் - இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள் ளது. மாநில மொழிகளுக்கு இடம் இல்லை.  இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரா னது. இந்தியல்லா மாநிலங் களைச் சேர்ந்த தேர்வர் களுக்கு பாரபட்சம் காண்பி ப்பது ஆகும். மேலும் இப்படி பணி நியமனம் பெறப்  போகிற ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணிய மர்த்தப்பட உள்ளனர். உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் எப்படி இவர்கள் மக்களுக்கு சேவை ஆற்றப் போகிறார்கள்? ஏற்கெனவே உள்ளூர் தேர்வர்களின் பிரதிநிதித் துவம் தெரிவு பட்டியல் களில் மிகக் குறைவாக உள்ளதென்ற பிரச்சனைகள் பல துறைகளின்/ நிறு வனங்களின் பணி நியமனங் களில் வெளிப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்டாப் செலக்சன் கமிசன் பணி நியமனங்களும், மொழிச் சமத்துவம் கடைப்பிடிக்கப் படாததால் அத்தகைய பார பட்சத்தை உள்ளடக்கிய தாகவே அமையப்போகிறது.  எனவே உடனடியாக தாங்கள் தலையிட்டு ஸ்டாப்  செலக்சன் கமிசன், மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்களை உறுதி செய்ய  அறிவுறுத்துமாறு வேண்டு கிறேன்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.