கண்ணூர், ஏப். 9- ‘அயித்த விருத்த போராட்டத்தின்றே அந்திஜுவாலைகள்’ (தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தின் மாலை வெளிச்சம்) என்கிற நூலை சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் வெளியிட்டார். சிபிஎம் அகில இந்திய மாநாட்டையொட்டி நடக்கும் உலக புத்தக திருவிழாவில் இந்நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (ஏப்.5) நடைபெற்றது. இந்தியாவில் சாதிய பாகுபாட்டுக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டங்களுக்கு அரசியல் ரீதியாக தலைமை வகிப்பது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியாகும் என ஏ.கே.பத்மநாபன் கூறினார்.
தமிழ்நாட்டில் சாதியத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களின் வரலாறும் அதுகுறித்த கட்டுரைகளுமே இந்த நூலின் உள்ளடக்கம். புதிய சூழ்நிலையில் சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அதற்கு தலைமை தாங்கும் எனவும் அவர் கூறினார். சிபிஎம் கண்ணூர் மாவட்ட செயலா ளர் எம்.வி.ஜெயராஜன் நூலைப் பெற்றுக் கொண்டார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோர் கட்சியின் ஆங்கில வெளியீடான பீப்பிள்ஸ் டெமாக்ர ஸியில் தொடராக எழுதி வெளியான கட்டுரை களின் தொகுப்பாகும் இது. நிகழ்ச்சியில் பி.சம்பத் பேசினார். புத்தக திருவிழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் மனு தாமஸ் தலைமை வகித்தார். கண்ணூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வி.கோபிநாத், சிந்தா புக்ஸ் மேலாளர் கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.