எண்ணூரில் தூசி, நச்சுக்களால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு: பொதுமக்கள் அவதி
சென்னை, ஜூன் 3- சென்னை எண்ணூர் அருகே உள்ள சத்தியவாணி முத்துநகரில் வசிக்கும் சுமார் 1,000 குடும்பங்கள் சாம்பல் நிற மெல்லிய ரசாயனப் பொடி காற்றை மாசு படுத்துவதாகவும், தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகள் மற்றும் திறந்தவெளி களில் படிந்து, கண்களில் எரிச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுத்துவ தாக புகார் அளித்துள்ளனர். எண்ணூர் பகுதியில் செயல்படும் ரசாயன ஆலை ஒன்றில் இருந்து வெளியேறும் தூசு, எண்ணூர் சத்திய வாணி முத்து நகர் முதலாவது தெரு வில் உள்ள வீடுகளில் படிகிறது. மேலும், மொட்டை மாடிகளிலும் வீட்டின் பக்கவாட்டு சுவரிலும் தூசு படிவதால், வீட்டின் நிறமே மாறிவிட்டது. அருகில் உள்ள மரங்கள் மற்றும் செடிகளில் இந்தப் படிவுகள் காணப் பட்டன. அருகிலுள்ள ஒரு தொழில் நிறு வனத்தில் இருந்து மாசு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். இங்கு ரசாயன ஆலை மட்டுமின்றி, ஏராளமான கனரக என்ஜினீயரிங் தொழிற் சாலைகள், வாகன உதிரிபாக தொழிற் சாலை, பெட்ரோ கெமிக்கல் நிறு வனங்கள் உள்ளன. இதனாலும் அந்த பகுதி மாசு படிந்து காணப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தனியார் உரஆலை உரப் பிரிவு நிர்வாகம் திறந்த வெளிப் பகுதிகளில் ஜிப்சத்தை சேமித்து வைத்திருந்தது, அதில் இருந்து வெளி யேறும் உமிழ்வுதான் இந்த பாதிப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், இங்கு அடிக்கடி இதுபோன்ற மாசு பிரச்சனை ஏற்படுகிறது என்றா லும், இவ்வளவு கனமான சாம்பல் போன்ற படிவுகளை இதற்கு முன்பு நாங்கள் பார்த்ததில்லை. இது ஜன்னல்கள் வழியாக எங்கள் வீடு களுக்குள் நுழைந்து, உணவு மற்றும் தண்ணீர் மாசுபடுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சுவாசப் பிரச்சனை, கண்எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.