tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாளை  மக்கள் குறைதீர்க்கும்  முகாம் '

பெரம்பலூர், ஜுன் 12-  பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைத் திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் மேற்கு கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ச.சுந்தரராமன் அவர்கள் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், வி.வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், கீழப்புலியூர் தெற்கு கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், திம்மூர் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ்குமார் தலைமையிலும் ஜுன் 14 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.  இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜுன் 14 அன்று  பொதுவிநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், ஜுன் 12-  பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.  அதன்படி, வரும் ஜுன் மாதத்திற்கான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஜுன் 14 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.   எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து   பயன்பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் மக்கள் திட்ட முகாம்

மயிலாடுதுறை, ஜுன் 12-  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம், அகணி, கொண்டத்தூர், பாகசாலை ஆகிய வருவாய்   கிராமங்களில் கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர்.கோவி செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்து, பார்வையிட்டு, 126 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தலைமை வகிக்க, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட அறங்காவலர்கள் குழுத் தலைவர் எஸ். சுவாமிநாதன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரன், சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், திருமுருகன், சுமதி, மஞ்சுளா மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.