நாளை பொது விநியோக குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், மே 8- பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப் பின், அதனைக் களை வதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொ டர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற் கான பொது விநியோ கத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மே 10 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, பொது மக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர் புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்து உள்ளார்.
தேநீர், சிற்றுண்டி, உணவகம் நடத்த விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், மே 8 - தமிழ்நாடு ஆளுநருக் காகவும், அவர் சார்பாக வும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத் துவமனை வளாகத்தில் 09.05.2025 முதல் 30.04.2028 வரையான மூன்றாண்டு களுக்கு, சிற்றுண்டி, தேநீர் மற்றும் உணவகம் நடத்திட ஒப்பந்தப் புள்ளி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் தஞ்சா வூர் (இ) கும்பகோணம் இணை இயக்குநர் நலப் பணிகள் ஆகியோரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளிக் கான நிபந்தனைகள் மாவட்ட ஆட்சியரின் வலைதளம் https;//thanjavur.nic.in/ இல் உள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விவசாயிகள் அதிக விலைக்கு விளைபொருட்கள் விற்க அழைப்பு
பெரம்பலூர், மே 8 - பெரம்பலூர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை வேளாண் வணிகம், துணை இயக்குநர் கோவிந்தராசு, பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் குழு செய லாளர் சந்திரமோகன், விற்ப னைக்கூட கண்காணிப்பா ளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் எள் மறை முக ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் மருவத்தூர், வடக்குமாதவி, ஏரிக்கரை, சித்தளி, கிருஷ்ணாபுரம், நெய்குப்பை, அனுக்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கள் கொண்டு வந்த 2 ஆயி ரம் மெ.டன் எள் விளை பொருள் ஏலம் விடப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்துகொண்டு எள் கொள் முதல் செய்தனர். எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலை யாக ரூ.110/- வீதம் ரூ.1,84, 828-க்கு விற்பனை செய்யப் பட்டது. எனவே, பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் தின சரி மறைமுக ஏலத்திற்கு விவசாயிகள் விளைபொருட் களை கொண்டு வந்து, அதிக விலைக்கு விற்று பயன்பெற லாம் என பெரம்பலூர் விற்பனைக் குழு செயலாளர் சந்திரமோகன் தெரிவித் துள்ளார்.
வாகன வரி, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, மே 8 - சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்தின் ஸ்ரீரங்கம் பகுதி ஆட்டோ சங்கப் பேரவை கூட்டம் வியாழனன்று திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் நடந்தது. கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ரகுபதி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் துவக்க உரையாற்றினார். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா வாழ்த்துரை வழங்கினர். ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், சங்க மாவட்டத் தலைவர் சார்லஸ், சங்க மாவட்ட பொருளாளர் பழனியப்பன், சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் வெற்றிவேல் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மோட்டார் வாகனச் சட்டம், சாலை பாதுகாப்பு மசோ தாவை திரும்ப பெற வேண்டும். வாகன வரி, எப்.சி. கட்ட ணம், சாலை வரி, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ. 3000 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். மானியத்தில் ஆட்டோ லோன் வழங்க வேண்டும். காவல்துறையின் அநியாய அபராதத்தை தடுக்க வேண்டும். கேரளா மாநில அரசை போல் தமிழ கத்திலும் ஆட்டோவிற்கான இணையவழி ஆட்டோ ஆப் சேவையை துவங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீரங்கம் பகுதிக்குழு தலைவராக எஸ். முகமது ஜின்னா, செயலாளராக எஸ்.ரகுபதி, பொருளாளராக பி.முத்து உள்பட 7 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது.