மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன், நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தஞ்சாவூர், ஜுன் 12- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம், மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினர். கடனுதவி வழங்கும் விழாவில், மகளிர் சுய உதவிக்குழு வங்கிக் கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, முதியோர் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, சிறப்பு குழுக்களுக்கான சுழல் நிதி, வட்டார வணிக வளமையத்தின் மூலம் தொழில் முனைவோருக்கு கடனுதவி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கடனுதவி என 1,170 குழுக்களில் உள்ள 12,632 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் நூறு கோடியே 88 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர்கள் சண்.இராமநாதன் (தஞ்சாவூர்), க.சரவணன் (கும்பகோணம்), மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கே.எம்.கார்த்திக்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.