tamilnadu

img

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக! மயிலாடுதுறையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக! மயிலாடுதுறையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பருவம் தவறி பெய்த கனமழை 

மயிலாடுதுறை, ஏப்.23 - மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜன.17, 18 இல் பெய்த கன மழையால் சுமார் 60 ஆயிரம் ஹெக் டேர் நெற்பயிர் சேதமடைந்தது. இத னால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உடனடியாக நிவார ணத்தை வழங்கிட வேண்டும்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் தொடர்ச்சியாக பயிர் சேதம் அடைந்தாலும் அந்த  ஊராட்சிகளுக்கு தொடர்ந்து இன்சூரன்ஸ் வழங்காமல் வேளாண் மைதுறை, புள்ளியல்துறை, காப் பீட்டு நிறுவனமும் கூட்டு சேர்ந்து விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. தமிழ்நாடு அரசு தலையிட்டு 2025-க்கான பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் உடனடியாக உரிய இழப்பீட்டை பெற்றுத் தர  கோரி அனைத்து விவசாய சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட் டம் புதனன்று நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ் தலைமையில் நடைபெற்ற விவ சாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புதுச்சேரி மாநில முன் னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் போராட்ட களத் திற்கு வந்து வாழ்த்திப் பேசினார். டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டெல்டா அன்பழகன், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன், கூட்டமைப்பின் தலைவ ரும், இயற்கை விவசாயியுமான அ. இராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கரும்பு கே.முருகன், காவிரி டெல்டா பாசன விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஷ், தஞ்சை காவிரி ஒருங்கி ணைப்புக் குழு வேட்டங்குடி சீனி வாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் குண சுந்தரி உள்ளிட்ட கூட்டமைப்பில் உள்ள சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.  தொடர்ந்து பல்வேறு போராட் டங்கள் நடத்தப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஆட்சியர் அலுவல கம் முன்பு தொடர் காத்திருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர். 8 மணி நேரத்தை கடந்தும் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதிகாரி கள் பேச்சுவாாார்த்தையில் ஈடுபட்ட தையடுத்து, விவசாயிகள் போராட் டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.