குத்தகை விவசாயிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கிடுக!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
உடுமலை, மே 14 - ஒன்றிய அரசால் வழங்கப்படும் விவசாயிகளுக்கான தேசிய அடை யாள அட்டையை, குத்தகை விவ சாயிகளுக்கும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலக் குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திரு மூர்த்திமலையில் மே 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒன்றிய அரசு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கி வருகிறது. இந்த அடையாள அட்டையின் அடிப்படையில், விவ சாயக் கடன், மானியங்கள், இடு பொருட்கள் வழங்கப்படும் என வும், வேளாண் நிதியும் இதன்படியே ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையா னது பட்டாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 50 முதல் 60 சத வீத விவசாயிகள், குத்தகைதாரர் களாக உள்ள நிலையில், தேசிய அடையாள அட்டையின் மூலம் கிடைக்கும் சலுகைகள் இவர் களுக்கு கிடைக்காது. எனவே, குத்தகை விவசாயிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும். தற்போது சூறாவளிக் காற்று டன் பெய்த கோடை மழையால், திருப்பூர், ஈரோடு, கோவை, திருச்சி, தென்காசி, தேனி, தூத்துக் குடி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்க ளில் சுமார் 2,500 ஏக்கர் வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந் துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் தாலூகா, கிருஷ்ணா புரத்தில் இருக்கும் அமராவதி சர்க்கரை ஆலையை உடனடியாக இயக்க வேண்டும். ஆலையை பராமரிக்க தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 5 ஆம் தேதி, மடத்துக்குளத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற வுள்ளது. மேலும், ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால், டெல்டா மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். விதை, உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டம், மதுக்கரை மடத்துக்காடு பகுதியில் 1979 ஆம் ஆண்டு ராணுவப் பயிற்சிக்காக 22 விவசாயிகளிடமிருந்து 113 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் பட்டதற்கு, ஏக்கர் ஒன்றுக்கு ஆயி ரம் ரூபாய் மட்டுமே விவசாயி களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது அங்கு ஒரு ஏக்கர் நிலம் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள தால், ராணுவப் பயன்பாட் டில் இல்லாத விளைநிலங்களை மீண்டும் விவசாயிகளுக்குத் தர வேண்டும். மேலும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசா யிகளின் கனவு திட்டமான ஆனை மலையாறு - நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.