tamilnadu

img

வாணிபக் கழக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குக! ஜுன் 19-இல் தொடர் காத்திருப்பு போராட்டம்

வாணிபக் கழக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குக! ஜுன் 19-இல் தொடர் காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 3-  சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம், மாநில செயற்குழுக் கூட்டம் சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர். புவனேஸ்வரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில் கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கக் கோரி ஜுன் 19 ஆம் தேதி தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது. மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் திரளாக கலந்து கொள்வது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சுப்புராஜ், கதிரேசன், பாண்டியன், ராசப்பன், ராஜாங்கம் உள்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.