மதுரை, செப். 27 - தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை நேர மசோதாவை எதிர்த்து, கடந்த ஏப்ரலில் மதுரை பெரி யார் பேருந்து நிலையம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரி வித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள், மாணவர்களின் 26 பேர் மீது மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அவசர அவ சரமாக மதுரை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் வேலைக்கு செல்வ தில் பிரச்சனையும், வெளி நாடு செல்வதற்கு பாஸ்போ ர்ட், வாகன ஓட்டுநர் உரிமம் எடுப்பதில் பிரச்சனையும் ஏற்பட்டது. எனவே, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாலிபர் சங்கத்தினர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நாகார் ஜூன் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர்கள் பாண்டித்துரை, காளி தாஸ் ஆகியோர், தமிழ்நாடு அரசே 12 மணி வேலைநேர மசோதாவை திரும்பப் பெற்றுவிட்ட நிலையில், போராடியவர்கள் மீது வழக்குப்பதிந்து அவசர அவ சரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டி ருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று வாதிட்டனர். இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.