சென்னை, ஏப். 23- பொதுப் போக்குவரத்தே சமூகத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரி வித்தார். “அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வலுப்படுத்த, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைக் குறைக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பொதுப் போக்குவரத்து மேம்பாடு” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் சிறப்பு ஆய் ய்வரங்கம் சென்னையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வ ரங்கில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது; தமிழகத்தில் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக் கின்றன. போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற நிலையில், தொழிலாளர்களின் ஊதியத்திற் காக, உரிமைகளுக்காகத் தொழிற்சங்கம் பலகட்ட போராட்டங்களை நடத்தும் அதே நேரத்தில், பொதுப் போக்குவரத்தைப் பாது காக்க வேண்டும், அதைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆய்வரங்கத் திற்கு ஏற்பாடு செய்தது பாராட்டத்தக்கது
எதிர்விளைவுகள்
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மிக மோசமான நெருக்கடிக்குச் சென்ற தற்குத் தினசரி ஏறிக்கொண்டிருக்கும் டீசல் விலை முக்கிய காரணம். டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு 1000 முதல் 1200 கோடி ரூபாய் வரை கூடுதலாக அரசுக்குச் செலவாகிறது. அப்படியானால் எவ்வளவு நாள் பேருந்துகளை இயக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே தொழிலா ளர்களுக்கு பலவகைகளில் சேர வேண்டிய 11 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. போக்குவரத்துக் கழகங்கள் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் சூழலில், பொருளாதார நெருக்கடி இருக்கிறது, அல்லது டீசல் விலை உயர்கிறது. எனவே பொதுப் போக்குவரத்தை முடக்கி விடலாம் அல்லது படிப்படியாகப் பேருந்துகளை குறைக்கலாம் என்ற நிலைக்கு அரசு சென்றால் அது மோசமான எதிர்விளைவு களை உருவாக்கும்.
நட்டத்திற்கு யார் காரணம்?
இந்த நெருக்கடிக்குப் போக்குவரத்து ஊழியர்களோ, பொதுமக்களோ காரணம் இல்லை என்பதை அரசு உணர வேண்டும். இந்த நெருக்கடிக்கு அரசின் நடவடிக்கை களே காரணம். இந்த நெருக்கடிகளைத் தீர்ப்ப தற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த சமூகத்தின் நலனைப் பேணிக் காப்பதற்கு பொதுப் போக்குவரத்தை அதிகப் படுத்தப் பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வாகனங்களிலிருந்து வெளி யேறும் புகைதான் சுற்றுச்சூழல் மாசுபடுவ தற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தனிநபர் வாகனப் பயன்பாடுதான். இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை அதிகரித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு குடும்பமும் இன்று மருத்துவத்திற்குக் கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது.
சமூகத்தை அழிக்கும் சூழல் மாசு
சுற்றுச்சூழல் மாசு ஒட்டுமொத்த சமூகத் தையே அழிக்கிறது. சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. இப்போது சென்னையைத் தான் ஆட்டோமொபைல் சிட்டி என்று கூறு கிறார்கள். அதிகமான பன்னாட்டு நிறுவனங்க ளைக் கொண்டு வந்து கார் உற்பத்தி செய்யப்படுகிறது. கார் இருந்தால்தான் சமூ கத்தில் கவுரவம் என்ற மனோநிலையை உருவாக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவ னங்கள் லாபி செய்கின்றன. பொதுப் போக்கு வரத்து அழிந்து வருவதால் தேசத்தின் பொ ருளாதாரம், குடும்பத்தின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
வாகன அதிகரிப்பு பல்வேறு சமூக நெருக்கடிகளை உருவாக்குகிறது. இதற்கு மாற்று பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துவதுதான். பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்தி னால் பொருளாதார ரீதியில் சேமிக்க முடியும், சுற்றுச்சூழல் மாசு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும்.பெரியளவில் கார்ப்ப ரேட் பொருளாதாரக்கொள்கைகள் அம லாக்கப்படும் நிலையில், நாளுக்குநாள் பொதுப் போக்குவரத்து சுருங்குவதும், தனி நபர் வாகனங்கள் நாளுக்குநாள் அதிகரிப்ப தும் மோசமான விளைவுகளையே உரு வாக்கும். எனவே அரசு உரிய நிதியை ஒதுக்கி பொதுப் போக்குவரத்தைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஆய்வரங்க கலந்துரை யாடல் சமூகத்தினுடைய அனைத்து மட்டங்க ளிலும் நடைபெற வேண்டும். இது தொழி லாளர்களுடைய கருத்தாக மட்டும் நின்று விடாமல் அனைத்துத் தரப்பு மக்களுடைய கருத்தாக மாற வேண்டும். பொதுப் போக்கு வரத்தைப் பாதுகாக்கும் இந்த மகத்தான பணியை கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசி னார்.
இதில் ‘அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் சம்மேளன பொதுச் செய லாளர் கே.ஆறுமுகநயினார், ‘உலகில் பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவ மும், தமிழகம் செய்ய வேண்டியதும்’ என்ற தலைப்பில் பன்னாட்டு பொது போக்கு வரத்து நிபுணர் முனைவர் வி.அமுதன், ‘விபத்தைத் தவிர்க்க, போக்குவரத்து நெரிச லைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்’ என்ற தலைப்பில் தொழில்நுட்ப மதிப்பீட்டாளர், சாலை பாதுகாப்பு நிபுணர் ஜெ.கிருஷ்ண மூர்த்தி, ‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, உலக வெப்ப மயமாதலைத் தடுக்க பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர ராஜன், ‘சாமானியனின் பயணம் பொது போக்குவரத்தே’ என்ற தலைப்பில் அருஞ்சொல் இணைய இதழ் ஆசிரியர் சமஸ் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். தமிழக சட்டமன்ற கட்சிகளின் குழுத்தலைவர்கள் கே.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), எம்.சிந்தனைச்செல் வன்(விசிக), டி.சதன் திருமலைகுமார் (மதிமுக) ஆகியோரும் பேசினர். முன்னதாக துணைப் பொதுச் செயலாளர் வி.தயா னந்தம் வரவேற்றார். பொருளாளர் வி.சசிக் குமார் நன்றி கூறினார்.