சென்னை,நவ.12- உயர் கல்வியில் அதிக மதிப் பெண் பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில், கல்வி இறுதி ஆண்டில் திறன் மேம்பாடு பயிற்சிக் கான பண உறுதி ஆவணம் வழங்கப் படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஆதிதிராவிடர் மாண வர்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பண உறுதி ஆவணம் ரூ.12, 15 மற்றும் 25 ஆயி ரம் பிரிவுகளின் கீழ் வழங்க ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி ஊக்க திட்டத்திற்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிரா விடர் மாணவர்கள் இருக்க வேண்டும். போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டப் பயனாளியாக இருக்க வேண்டும். அரசு அரசு உத விபெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் இருக்க வேண்டும். உயர் கல்வியின் இறுதியாண்டில் உள்ள கடைசி பருவத்திற்கு முந்தையப் பருவம் வரை 60 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பண உறுதி ஆவணம் பெறப்பட்டு 6 மாதத்திற்குள் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை பெறாத மாணாக்கரின் பண உறுதி ஆவணம் நிராகரிக்கப்படும். சம்பந்தப்பட்ட பயிற்சி நிறு வனங்கள் தவறானத் தகவல்கள் வழங்கப்படின், அப் பயிற்சி நிறு வனம் இத்திட்டத்தின் கீழ் நீக்கப் பட்டு கருப்புப் பட்டியலில் வைக்கப் படும். நீக்கப்பட்ட கல்வி நிறுவனங் களில் பயிற்சி பெறும் மாணாக்க ருக்கு பணவுருதி ஆவணம் வழங்கப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.