tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி முயற்சியால் மாற்று திறனாளி மாணவிக்காக புதிய அரசாணை வெளியீடு

சு.வெங்கடேசன் எம்.பி முயற்சியால் மாற்று  திறனாளி மாணவிக்காக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான மாணவி த. லட்சுமி, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் கால்களால் ஓவியம் வரைந்துள்ளார்.
மதிப்பெண் குறைவு என்ற காரணத்தால் சேர்க்கை கிடைக்க இல்லை. இந்தப் பிரச்சனையை அரசின் கவனத்திற்குக் சு.வெங்கடேசன் எம்.பி கொண்டு சென்றார்
விளிம்புநிலையினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சட்டவிதிகள் வளைந்து கொடுப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு. அரசாணைகளுக்கு மனிதத்தன்மையே அடிப்படையாக இருக்க வேண்டும் என துறையின் அமைச்சரிடமும் துறையின் செயலாளரிடமும் வலியுறுத்தினார்.  இதையடுத்து
சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று மாணவி த. லட்சுமிக்கு கல்லூரியில் சேர்க்கை வழங்க புதிய அரசாணையே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இதுவன்றோ செயல். பெருமகிழ்வு தெரிவித்துள்ளார்.

;