திருச்சிராப்பள்ளி, ஏப்.5 - திருச்சி பெல் சிஐடியு சங்க வெளி அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, பெல் சிஐடியு சங்க முன்னணி தோழர்களின் பிரத்யேக சந்திப்பு நடைபெற் றது. அப்போது பெல் சிஐடியு சங்கம் சார்பில் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், ரூ.4442.75 கோடி மதிப்புமிக்க எண்ணூர் 1X660 மெகாவாட் அனல் மின் நிலைய ஆர்டரை டிஏஎன்ஜிஇ டிசிஓ - பிஜிஆர் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை ரத்து செய்யவும், அதை பொதுத்துறையான பெல் நிறுவனத்திற்கு வழங்கிட வேண்டும். தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து மின்சார தயா ரிப்பு ஆர்டர்களும் நேரடியாக பொதுத்துறை நிறுவனமான பெல்லிற்கு வழங்கிடவும், தமி ழக அரசின் டிஏஎன்ஜிஇடிசிஓ நிறுவனத்திடமி ருந்து பெல் நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 3000 கோடிக்கு மேல் உள்ளதை வழங்கிட தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என தெரி விக்கப்பட்டிருந்தது. கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, பெல் நிறுவன உற்பத்தி மற்றும் ஆர்டர் நில வரங்களையும், தொழிலாளர்களின் நலன் களையும் கேட்டறிந்தார். மேலும், தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் மானியக் கோரிக்கையில் எண்ணூர் ஆர்டர் குறித்து தனியாக தீர்மானம் கொண்டு வரவும், மின்சார உற்பத்தி ஆர்டர் ரூ.3000 கோடி நிலுவைத்தொகை ஆகிய மிக முக்கிய விசயங்களை, தமிழக முதல்வரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் மற்றும் பெல் சிஐடியு நிர்வாகிகள் உடனிருந்தனர்.