மேற்கு உலகின் நயவஞ்சகன் என்று முற்போக்கு வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் பொதுமக்களும் அன்றாடம் கொடூரமாக கொல்லப்படும் செய்திகளை கேட்டு நம்மில் சிலர் ஐயோ பாவம் என்று உச்சுக்கொட்டி விட்டு கடந்து போகிறோம். ஆனால் பெரும்பகுதி மக்களுக்கு இப்படி ஒரு கொலைபாதகம் நடப்பதே தெரியாது எனலாம்.
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப் பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதல். தனித்து வம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டா லும் ஏகாதிபத்திய நாடுகளின் கீழ்த்தரமான அரசி யலாலும் இந்த பிரச்சனை தொடர்ந்துகொண்டே இருக்கி றது. கிழக்கு உலகின் மகிழ்ச்சியும் செழுமையும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் ஏன் எப்போதுமே இல்லா மல் போகிறது? சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய குழந்தைகளையும் பெண்களையும் யார் தான் பாதுகாக்கப்போகிறார்கள் என்ற கேள்வியை தமு எகசவும் முற்கோக்கு அமைப்புக்களும் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பாலஸ்தீன ஆதரவு இயக்கம் நிறுவி பொது மக்களுக்கு கலைவழியில் இந்த சர்வதேச கொடு மைக்கு எதிராக உரக்க கூவிவருகிறது. கடந்த ஆக 8 அன்று மாலை சைதாப்பேட்டை ராஜ்திரை யரங்கம் அருகே ஒரு தனியார் மண்டபம், மக்கள் கூட்டத் தால் நிறைந்து ஆனால் நிசப்தமாய் காட்சியளித்தது. ஒரு பார்வையாளனாய் உள்ளே நுழைந்தபோது, மயிர் கூச்செரியும் நடிப்பும் உலக அரசியலையும் ஒன்றிய அரசியலையும் விளக்கும் நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது. துப்பாக்கி ஏந்தி ராணுவ மிடுக்கோடு சில இளைஞர்களும் ரத்தமும் சதை யுமாக குழந்தைகளும் பெண்கள், முதியவர்கள் என கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். “சடலமாய் பிரகாசிக்கிறோம்” என்ற தலைப்பி டப்பட்ட இந்த நாடகத்தை செம்படை கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹேமாவதியின் உயிரோட்டமான வரியில் ராகவனந்தா இயக்கி இருந்தார். தன்னுடைய எதிர்கால திரைப்படத்திற்கு வைக்க நினைத்த பெயரின் தலைப்பை இந்நாடகத்திற்கு கொடுத் தது மட்டுமல்லாமல் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி கதைக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி யிருந்தார். இந்நாடகத்தின் முதல்காட்சியே நெஞ்சை பதை பதைக்க வைத்தது. இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட மக்களை கண்டு கதறி அழுது பாடும் செல்வி யின் ஓலக்குரல் பார்வையாளர்களையும் கண்கலங்கச் செய்கிறது.
கனவு கண்ட கண்கள் எல்லாம் கருகிப்போனதே, காதல்கொண்ட நெஞ்சம் எல்லாம் சிதறி போனதே, இன்பம் வரும் என்று இருந்தோம் துன்பம் வந்ததே, இதயம் இல்லா மனிதர்களால் இதுவும் நேர்ந்ததே …. என்று செல்வியின் கணீர் குரலால் அரங்கத்தில் உள்ள வர்களின் இதயத்தை கனக்கச்செய்கிறார். ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று கொக்கரிக்கும் இஸ்ரேல் பிரத மர் பெஞ்சமின் நெதன்யாகு அப்பாவிகளை கொல்வதை அனைவரின் மனதில் ஆழப்பதிக்கிறது இந்த நாடகம். ஏகாதிப்பத்திய அமெரிக்கா, இங்கிலாந்தின் அப்பட்ட மான ராணுவ உதவியின் மூலம் அப்பாவிகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலை சாடும் வசனங்கள், ஏவுகணை களையும் இயந்திர துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் சுமந்தாலும் நாங்கள் போராடுவோம் என்று முழுங்கும் பாலஸ்தீனமக்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் மெய்சிலிர்க்கச்செய்கிறது. 1967-க்கு முன்பிருந்த எல்லையுடன் பாலஸ்தீனம்தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும், இஸ்ரேல் நாட்டு ராணுவம் நிபந்தனையின்றி தாக்கு தலை நிறுத்தவேண்டும், இனஅழிப்பிலிருந்து அப்பாவி பாலஸ்தீன மக்களை பாதுகாக்கவேண்டும், இஸ்ரேல் சிறைகளில் வாடும் பாலஸ்தீன அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசி உடனே விடுதலை செய்யவேண்டும், இஸ்ரேலுடன் இந்திய அர சாங்கம் ராணுவதளவாட வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இந்த நாடகம் பறை சாற்றியது. வடசென்னையில் வீதிநாடகத்தின் மூலம் தனது திற மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த தோழர் பா. ஹேமாவதி இந்நாடக உருவாக்கத்திற்கு பெரும் பாங்காற்றியிருக்கிறார் என்றால் மிகையாகாது, திரைக்கலைஞர் நிறைமதி, சமூகப்போராளிகளாக வலம் வரும் சவுத்விஷன் நீதிராஜன், பாமிதா, கவிசேக ரன், ஆனந்தன், சந்திரன், சேகுவேரா, ராஜலட்சுமி, ரித்துள், மித்துன்பாரதி ஆகியோர் தங்கள் பங்கை சரி செய்திருந்தனர்.
ஒரு காட்சியில், இறைவன், கடல் மணல்போல இஸ் ரேல் என்பவனின் வம்சம் பெருகும் என்று கூறப்பட்ட போது இஸ்ரேல் என்ற நாடு கிடையவே கிடையாது. ஆனால் பாலஸ்தீனம் அப்பொழுதே இருந்தது... என்ற குமுறலோடு விம்மும் பாமிதாவின் நடிப்பு பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது. குழந்தைகள் வளர்ந்தால் பாலஸ்தீனத்திற்காக போராடுவாங்க என்பதற்காக பள்ளிக் கூடங்களில் குண்டு வீசி அழித்தப்ப செத்துப்போன குழந்தைகளில் நானும் ஒரு வன் என்று ரத்த சகதியில் மிதக்கும் ஒரு குழந்தையின் ஓலக்குரலில் நாடகம் அடுத்தகாட்சிக்கு நகரும் போது பார்வையாளர்கள் நிலைக்குத்தியபார்வையோடு இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தனர். உங்கள் வானிலே நட்சத்திரங்கள், எங்கள் வானிலே ஏவுகணைகள்... உங்கள் மண்ணிலே விளையும் பயிர்கள், எங்கள் மண்ணிலோ பதுங்கு குழிகள்... உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில்... எங்கள் பிள்ளைகள் எரி யும் நரகத்தில்… யாராலே யாராலே என்று பாலஸ்தீனிய பிணங்களின் ஒப்பாரியால் அவையில் பார்வையாளர் மாடத்தில் விம்மல் சத்தங்கள் அடங்க சிலநிமிடங்கள் ஆனது. இஸ்ரேல் ராணுவக்குண்டு வீச்சால் 20 ஆயிரம் குழந்தைகள் உட்பட 40 பேர் பரிதாப மரணச் செய்தி யை புறக்கணித்து செல்போன் கேளிக்கையில் மனம் மயங்கிப் போன இளசுகளுக்கு இன்னொரு பகுதி இளை ஞர்களாலேயே அறிவுரை கூறுவது நல்ல வசன அமைப்பு... ஊடகங்களின் ஓரவஞ்சனையால் ஒதுக்கப்படும் காஸா, ரபா குண்டு வீச்சு செய்தியை குடும்பத்தில் விவா திக்கும் காட்சிகள், தினம் ஒரு ஜாலியன் வாலாபாத் படு கொலைகளை சந்திக்கும் பாலஸ்தீன மக்களின் வலி களையும் யூதர்களின் புல்டோசர் தாக்குதலையும் ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மை மக்களின் மீது தொடுக்கும் புல்டோசர் தாக்குதலையும் ஒப்பிட்டு இந்நாட கம் நய்யாண்டி செய்கிறது. வல்லரசு நாடுகள் நாங்க, பலதிட்டங்கள் போடுவோம் பாருங்க, ஏழைநாட்டை சுரண்டி திருடி தின்பவர்கள் நாங்க, எண்ணை வளத்துக்காக பல நாடுகள பிடிப்போம்.
ஆயுதங்களை விற்க சண்டை மூட்டி விடுவோம், எல்லை தாண்டும் சந்தை எமது திட்டம் புரிந்த விந்தை, இனி மக்கள் எல்லாம் மந்தை உன் நாடு ஆகும் கந்தை.. என்ற தோழர் ஹேமாவின் உக்கிர வரி அவை யோரின் ஆர்ப்பரிப்பு வலுசேர்க்கிறது. நிறைவாக எங்களை தெரிகிறதா…. அமெரிக்காவால் கொல்லப்பட்ட செவ்விந்தி யர்களின் போராட்டத்தொடர்ச்சி நாங்கள், ஆஸ்திரேலியர்களால் கொல்லப்பட்ட அபராஜி பழங்குடிகளின் போராட்டத்தொடர்ச்சி நாங்கள், கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக கிழிந்த சீருடைகள், உடைந்த துப்பாக்கிளோடு போட்டத்தைத் தொடங்கிய கியூபமக்களின் தொடர்ச்சி நாங்கள்… எங்களை தெரிகிறதா,, இன்றும் உலகத்தில்ஆதிக்கத்தால் வதைபடும் மண் ணின் மைந்தர்களின் போராட்டத்தொடர்ச்சி நாங்கள்... உலக மக்களே.. பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன என்பதை கவனித்து அப்பாவி மக்களை பாதுகாக்க பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தாரீர் என்று நிறைவு பெறுகிறது இந்த நாடகம்.
தமுஎகச சென்னை மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்த கலைப்பெருவிழாவில் திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வட,மத்திய,தென் சென்னை மாவட்டங்க ளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். நாடகவியலா ளர் பிரளயன், திரைக்கலைஞர் ரோகிணி, கலைஞன் பிரகதீஷ்வரன், மூத்த பத்திரிகையாளர் பாலு உள்ளிட்ட ஜாம்பவான்களின் பாராட்டுக்களை குவித்துவருகிறது “சடலமாய் பிரகாசிக்கிறோம்” நாடகம். தொலைக்காட்சி யிலும், செல்போன்களில் மூழ்கி கிடப்பதையும் அதையும் தாண்டி இளைஞர்கள் சமூக அக்கறையோடு யுத்தத்துக்கு எதிரான போராட்டம் நடத்தி மாற்றத்தை ஏற்படுத்துவ தாக நாடகம் நெஞ்சை நிமிர்த்துகிறது. காம்ரேட் கேட்ங்ஸ்டாவின் ராப் இசைக்குழு பாடல்கள், ஊர்க்கூடி ஓவியம் வரைதல், பாலஸ்தீன ஆத ரவு கவிதை முழக்கம், புத்தகக்காட்சி என கலைவடிவம் பல பரிணாமங்களை நிகழ்ச்சி பெற்றிருந்தது. கூட்டு முயற்சியின் வெற்றியால் நாடகம் (சடலமாய்) பிரகாசிக்கிறது. நாங்கள் வெல்லுவோம்.
- ம.மீ.ஜாபர்