tamilnadu

img

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்குவதில் லாபம் பார்க்கும் தனியார் நிறுவனங்கள்

நாகப்பட்டினம், நவ.9 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு காப்பீடு செய்த விவசாயி களுக்கு பாரபட்சமின்றி இழப்பீடுத் தொகை வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகப்பட்டினம் தாலுகா அலுவல கம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தாலுகா அலுவலகம் முன்பு காவல்துறையினர் தடுப்பு அமைத்து விவசாயிகளை தடுத்தனர். பின்னர் விவசாயிகள் சிறிது தூரம்  பேரணியாக சென்று தாலுகா அலு வலக நுழைவுவாயிலில் ஆர்ப்பாட்ட த்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன் கண்டன உரையாற்றினார்.

இப்போ, டோக்கியோ போன்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். பயிர் காப்பீடு வழங்கும் பொறுப்பை அரசே ஏற்று  நடத்த வேண்டும். கடந்த ஆண்டு நெல் அறுவடையின்போது பெய்த கனமழை யால் விவசாயிகள் பேரிழப்பை சந்தித்த னர். அவர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அரசு காப்பீட்டு நிறுவனங்கள் கொடுத்த இழப்பீடு தொகையை தனியார் நிறு வனங்கள் தருவதில்லை. அவர்கள் லாபம் சம்பாதிக்க விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள். இதற்கு ஒன்றிய அரசு  துணை போகிறது. 2022-2023 பயிர் காப்பீட்டை அரசு நிறுவனங்களே ஏற்று  நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் வி.வி.ராஜா, நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வடி வேல், திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜி.ஸ்டாலின்பாபு, நாகை நகர செய லாளர் க.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

திருக்குவளை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.சுப்ர மணியன் கண்டன உரையாற்றினார். தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, கீழையூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் எம்.அப்துல் அஜீஸ், கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட் ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். கீழ்வேளூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். எம்.அபுபக்கர் தலைமை வகித்தார். கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன் கலந்து கொண்டார். மாவட்ட குழு உறுப்பினர் எம்.எம்.அம்பிகாபதி நிறைவுரையாற்றினார். வேதாரண்யம் தாலுகா அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் உரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, வேதாரண்யம் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.அம்பிகாபதி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வெற்றி யழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.