tamilnadu

img

ரூ.2,500 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை,பிப்.1- தமிழ்நாட்டில் தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில்  உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்க ளின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பரவலாக தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தை திறமையாக கையாள்வது மிகவும் அவசியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு துறைமுகங்களைப் பயன்படுத்தி, சரக்குகளை கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகி றது. இத்துறைக்கு தனிக் கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளி யிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சரக்கு முனையங் கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக் களை அமைப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹாபக் லாய்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ெஜஸ்பர் கன்ஸ்ட்ரக் மற்றும் இயக்குநர் ஆல் பர்ட் லோ ரெண்டே ஆகியோர் முதல மைச்சர் ஜன. 31 அன்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, தமிழ் நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துரைத்து,

முதலீடு  செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில், ரூ. 2500 கோடி முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல மைச்சர் முன்னிலையில் மேற்கொள் ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்க ளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத் துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அபர்ட்டிஸ் நிறுவனத்தின் லாரா பெர்ஜானோ, சர்வதேச மற்றும் நிறுவன உறவுகளின் தலைவரை  தமிழ் நாடு முதலமைச்சர் சந்தித்துப் பேசி னார். இச்சந்திப்பின்போது, இந்தியா விலேயே அதிகமான சாலை அடர்த்தி யும், தரமான சாலை கட்டமைப்பு தமிழ் நாட்டில் உள்ளன என்பதையும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்த சாலை கட்டமைப்பை மேலும்  மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம்  தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று  முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பின்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்த கத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,  கைடன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை  அலுவலர் வே.விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.