சிதம்பரம், பிப். 16- தில்லியில் உரிமை கேட்டு போராடும் விவசாயி களை அடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக மோடி அர சின் விவசாயிகள் விரோத செயலை கண்டித்தும் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட் களுக்கு ஆதார விலையை சட்டமாக்கக் கோரியும், மின்சார சட்டம் 2023யை ரத்து செய்ய வலியுறுத்தியும் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது எஸ்.கே.எம் விவசாய சங்க கூட்டமைப்பின் இளங் கீரன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு வின் மாநில துணைத் தலை வர் மூசா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலா ளர் வாஞ்சிநாதன், விவசாய சங்க தலைவர் ரவீந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி யின் தமிழ்வாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிறகு செய்தியாளர் களை சந்தித்த கே.எஸ் அழகிரி, “எம்.எஸ்.சுவாமி நாதன் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விவசாயி கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால், மோடி அரசு கண்டுகொள்ள வில்லை என்று குற்றம் சாட்டினார். தலைநகர் தில்லியில் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் போராடு கிறார்கள். அந்த விவசாயி களை சந்திக்காத பிரதமர் மோடி, அபுதாபியில் நாரா யண கோயில் திறந்து வைக்க சென்றிருக்கிறார் என்று அவர் கடுமையாக சாடினார்.