தென்காசி, ஜூலை 3- தற்காலிக ஆசிரியர் நிய மனத்தை கைவிட வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக் குழு கூட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாநிலத் தலைவர் மூ. மணிமேகலை தலைமையில் நடை பெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் ச. மயில் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவுகள் குறித்து மாநிலப் பொதுச் செயலாளர் ச.மயில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய வாறு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதி யம் வழங்கப்பட வேண்டும் .தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். தற்கா லிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற்று உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும். காலங்காலமாக தமிழக அரசு ஊழியர்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை தமி ழக அரசு மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளதை திரும்பப்பெற வேண்டும். தமிழகத் தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங் கப்படும் அனைத்து சலுகைகளும் முன்பு வழங்கப்பட்டது போல் பாகு பாடின்றி அரசு உதவி பெறும் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கும் வழ ங்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் இன்றைய பணி சூழலை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை தமிழக அரசு கவ னத்திற்கு கொண்டுசென்று உடனடி யாக நிறைவேற்றக் கோரி மூன்று கட்ட தொடர் போராட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள் ளது. அதன்படி ஜூலை 21 அன்று மாநில முழுவதும் வட்டார தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 13 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம், முதல் பருவ விடுமுறை யில் சென்னையில் மாநில அள விலான போராட்டத்தை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.