செப்.3-இல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை
சென்னை: திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10 ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 3 ஆம் தேதி நடை பெற உள்ளது. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்குவங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வரு கின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற் காக செப்.3 ஆம் தேதி காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகிறார். பின்னர், பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடை பெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் அவர், மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் செல்கிறார்.