காஞ்சிபுரம்,மார்ச் 9- தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுவை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் சிறந்த முறையில் தொழில் செய்து மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருபவர்களை கவுரவிக்கும் விதமாக ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் காஞ்சிபுரத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தலைவர் ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசாமி தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது. விருதுகளை வழங்கி நிர்வாக அறங்காவலர் கல்பனா சங்கர் உரையாற்றினார். மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, பெல்ஸ்டார் நிறுவன முதன்மை மேலாளர் மீனாட்சிசுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவர் சகுந்தலா ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், சேலம், திருப்பூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இணையங்களின் நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.