tamilnadu

img

பொது வேலை நிறுத்தத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்பு

நாமக்கல், மார்ச் 22 - பொது வேலை நிறுத்தத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர். இப்போராட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில சம்மேளனம் அழைப்பு  விடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் சிஐடியு அலுவலகத்தில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தலைவர் பி.முத்துசாமி, மாநில பொதுச்செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம்.அசோகன் உட்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கை மற்றும் நூல் விலை உயர்வி னால் விசைத்தறி தொழில் அழிவை நோக்கி செல்கிறது. குறிப்பாக, கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் சலுகையாக மோடி அரசு  வழங்கியுள்ளது. மறுபுறம், தொழி லாளர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாத நிலையில் சுரண்டல் தீவிரமடைந்துள்ளது.  எனவேதான்,  ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம், ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம், பஞ்சப்படி மற்றும் தொழிலாளர் சட்டங்களை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தப் போராட்டம் நடை பெறவுள்ளது. இதன்ஒருபகுதியாக, மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம், மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும்  விசைத்தறி தொழிலாளர்கள் பெரும் திரளாக பங்கேற்று வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் அறை கூவல் விடுத்துள்ளது.