சென்னை, பிப். 19 - மின்கம்பங்கள் வழியாக செல்லும் கேபிள்கள் துண்டிக்க மாட்டோம் என்று மின்வாரியத் தலைவர், கேபிள் ஆப ரேட்டர்களிடம் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர். இந்த ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவைக்கான கேபிள்கள் மின்கம் பங்கள் வழியாக கொண்டு செல்லப் படுகிறது. சென்னையில் அனுமதி பெறாத கேபிள்கள், பயன்படுத்தப் படாமல் உள்ள கேபிள்களை சுற்று முறையில் மாநகராட்சி அகற்றி வரு கிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் மின்கம்பங்களில் கட்டப் பட்டிருக்கும் கேபிள் டிவி, கேபிள்களை 15 தினங்களுக்குள் அகற்ற தவறினால் அந்த கேபிள்களை வாரியமே அகற் றும் என்று மின்சார வாரியம் அறி வித்தது. இதனையடுத்து தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத் தின் மாநிலச் செயலாளர் சு.வெள்ளைச் சாமி, மின்சார வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லகானி, இயக்குநர் மா.சிவலி ங்கராஜன் ஆகியோரிடம் மனு அளித்து பேசினார். இதுகுறித்து சு.வெள்ளைச்சாமி கூறுகையில், “இரு தரப்பினரும் இணைந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்போம். அதுவரை வாரிய அதிகாரிகள் கேபிள் டிவி கேபிள்களை துண்டிக்க மாட்டார்கள் என்று வாரியத் தலைவர் உறுதி அளித்தார். மின் ஊழி யர்கள் வேலை செய்வதற்கு இடை யூறாக கம்பங்களில் உள்ள தேவையற்ற கேபிள்களை அகற்றி ஒழுங்குபடுத்தி தருவதாக உறுதியளித் துள்ளோம்” என்றார். இந்நிகழ்வின் போது சங்கத்தின் துணைத்தலைவர் பி.ஆர்.தணிகை வேல், உயர்மட்ட குழு உறுப்பினர் டி.டி.எம்.பாபு, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் தி.ஜெய் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.