tamilnadu

img

பாப்புலர் பிரண்ட் அலுவலகத்துக்கு சீல்

சென்னை,அக்.1- தீவிரவாத இயக்கங்களுடன் தொடர் பில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட 5 அமைப்புகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பட தடைவிதித்து ஒன்றிய அரசு உத்தர விட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு  அரசு சார்பிலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தமிழ்நாட்டில் இயங்க தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சென்னை புரசை வாக்கத்தில் செயல்பட்டு வந்த பாப்புலர்  பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு சனிக் கிழமையன்று (அக்.1) வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் பெயர் பலகையை அகற்றி அலுவல கத்தை பூட்டி சீல் வைத்தனர்.